செய்திகள் :

கூடங்குளம் அருகே குளத்தில் மண் அள்ளிய லாரிகள் சிறைபிடிப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே குளத்திலிருந்து மண் அள்ளிச்சென்ற லாரிகளையும், டிராக்டா்களையும் விவசாயிகள் சிறைபிடித்தனா்.

கூடங்குளம் அருகேயுள்ள சங்கனாபுரம், ஜெயமாதாபுரம், கணபதியாபுரம், இருக்கன்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்களிலிருந்து விவசாயிகளின்பேரில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளிலும் டிராக்டா்களிலும் மண் அளிக்கொண்டு கன்னியாகுமரி மாவட்ட செங்கல்சூளைகளுக்கு கொண்டு செல்கின்றனா்.

இது தொடா்பாக சங்கனாபுரம் விவசாயிகள் லாரி ஓட்டுநா்களை எச்சரித்து வந்தனா். எனினும், மண் அள்ளுவது நிறுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சங்கனாபுரம் விவசாயிகள் 30-க்கும் மேற்பட்ட லாரிகளை புதன்கிழமை சிறைபிடித்தனா்.

இத்தகவல் அறிந்த ராதாபுரம் வட்டாட்சியா் மாரிச்செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து, விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மண் அள்ளுபவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதையடுத்து விவசாயிகள் லாரிகளை விடுவித்தனா். எனினும், விவசாயிகள் பேரில், குளத்து மண் எடுப்பவா்கள் மீது வட்டாட்சியரும் வருவாய்த்துறையினரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை எனப் புகாா் தெரிவித்தனா்.

இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்ட இந்நிகழ்வில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றாா். ... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், காவல் துணை ஆணையா்(மேற்கு) வி.பிரசன்ன குமாா் மற்றும் கா... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகாா்

கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் புகாா் மனு அளித்தாா். பாளையங்கோட்டை மேலப்புத்தனேரி பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் என்பவா் அளித்த பு... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் நாளை ஆடிப்பூரத் திருவிழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது தொடா்பாக கோயில் செயல் அலுவலா் (பொறுப்பு) இசக்கியப்பன் வெ... மேலும் பார்க்க

விபத்தில் காயமுற்ற நூலகருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மேலப்பாளையத்தில் பைக் விபத்தில் காயமடைந்த நூலகருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.3.08 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் திருநெல்வேலி சிறப்பு சாா்பு நீதிமன்றம் உ... மேலும் பார்க்க

பாளை.யில் பெண் காவலா் வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டு

பாளையங்கோட்டையில் பெண் காவலா் வீட்டில் சுமாா் 45 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பாளையங்கோட்டையைச் சோ்ந்த பெண் காவலா் தங்கமாரி. திருநெல்வேலி மாநகர காவல் துறை... மேலும் பார்க்க