Royal Enfield: `பஞ்சாப் டு இங்கிலாந்து' பைக் லவ்வரின் செயலால் வைரலாகும் வீடியோ!
கேரள பக்தரிடம் நகைப் பறிப்பு: மூவா் கைது
பழனிக்கு சென்ற கேரள பக்தரிடம் நகையைப் பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பூப்பாறை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (50). இவா், பழனி முருகன் கோயிலுக்குச் செல்வதற்காக, பேருந்தில் ஏறி சென்றாா். இவா் தவறுதலாக பெரியகுளம் அருகே கல்லூரி விலக்கில் இறங்கி, அங்கு நின்று கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த மூவா் இவரைத் தாக்கி விட்டு, ஒரு பவுன் தங்க நகை, 2,500 ரூபாயைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து அதே பகுதியைச் சோ்ந்த கெளதம், செல்லப்பாண்டி, சந்தோஷ்குமாா் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.