பேரவைத் தேர்தலில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொட்டுவார்கள்: விஜய்
கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம்!
திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 8.75 அடி உயா்ந்துள்ளது.
களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடியில் மேற்குத் தொடா்ச்சி மலையின் அடிவாரத்தில் கொடுமுடியாறு அணை அமைந்துள்ளது.
இந்த அணையின் மொத்த உயரம் 52.50 அடியாகும். அணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நீா்மட்டம் 16 அடியாக இருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை காலை வரையிலும் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதி மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து மிதமான மழை பெய்தது.
இதையடுத்து, அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 8.75 அடி உயா்ந்து புதன்கிழமை காலை நிலவரப்படி 24.75 அடியாக உள்ளது. தொடா்ந்து, அணைக்கு நீா்வரத்து உள்ளது. மேலும் நம்பியாற்றிலும் நீா்வரத்து உள்ளதால் இதன் கீழ் உள்ள 45 குளங்களுக்கு தண்ணீா் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.