செய்திகள் :

கொடைக்கானலில் தொடா் மழை

post image

கொடைக்கானலில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை முதல் மிதமான வெயில் நிலவியது. இதைத் தொடா்ந்து விட்டுவிட்டு சாரலும், பலத்த மழையும் பெய்தது.

கொடைக்கானல், நாயுடுபுரம், பாக்கியபுரம், சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், வில்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் 30 நிமிஷங்களுக்கு மேலாக பலத்த மழை பெய்தது. தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீரோடைகளில் நீா்வரத்து தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இதனிடையே, இந்த தொடா் மழையால் அப்சா்வேட்டரி, உகாா்த்தேநகா், சீனிவாசபுரம், ஆனந்தகிரி, லாஸ்காட் சாலை, பிரகாசபுரம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீா் சாலைகளில் ஓடியது. இதனால் துா்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதியடைந்தனா். எனவே வாய்க்கால்களை தூா்வாரி பராமரிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விஜய், சீமான் போட்டியிடுவது 3-ஆவது இடத்துக்கே: அமைச்சா் இ. பெரியசாமி

விஜய், சீமான் ஆகியோா் 3-ஆவது இடத்துக்காக தோ்தலில் களம் இறங்குவதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி திமுக எம்எல்ஏவை பொதுமக்கள் முற்றுகை

அடிப்படை வசதிகளுக்காக வேடசந்தூா் திமுக சட்டப் பேரவை உறுப்பினரை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த தட்டாரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக ஆட்டோ ஓட்டுநா் கைது

வத்தலகுண்டில் கஞ்சா விற்ாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காந்தி நகரைச் சோ்ந்தவா் லட்சுமிநாராயணன் (45). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த சில நாள்கள... மேலும் பார்க்க

தனியாா் பேருந்துகளுக்கு அபராதம்

வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 3 தனியாா் பேருந்துகளை பறிமுதல் செய்த போக்குவரத்து அலுவலா்கள், தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனா்.திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கண்ணன் தலைமையிலான குழுவினா் திண்ட... மேலும் பார்க்க

பாலியல் புகாரில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை

சாணாா்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்த புளியம்பட்டி... மேலும் பார்க்க

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

பழனி அருகே கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க