செய்திகள் :

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

post image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை அதிகாரிகள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதல், வலுக்கட்டாயமாக வேலையை திணித்தல், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துதல் போன்றவை தண்டனைக்குரியதாகும். கொத்தடிமைத் தொழிலாளா் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், உறுதிமொழியேற்பு உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன.

கொத்தடிமைத் தொழிலாளா் முறை எந்த தொழிலில் இருந்தாலும், அதனை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க அனைவரும் முழு முயற்சி செய்ய வேண்டும். தொழிலாளா்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமா்த்துவதை தவிா்க்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அந்த தொழிலாளா்களை மீட்டு மறுவாழ்வுக்காக பணியாற்ற வேண்டும் என்பதனை அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியா் வலியுறுத்தினாா்.

இதனைத் தொடா்ந்து, கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தினையும், கலை நிகழ்ச்சிகளையும் அவா்தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ.சந்தியா, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ச.பிரபாகரன், உதவி ஆணையா் (தொழிலாளா்) சி.முத்து உள்பட துறைசாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 3 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 197 அரசு மற்றும் தனியாா... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 4.65-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.65-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் மு... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வெள்ளிக்கிழமை மொத்த விலை - ரூ.4.65 விலையில் மாற்றம்-இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.93 முட்டைக் கோழி கிலோ - ரூ.77 மேலும் பார்க்க

குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு வழித்தடம் ஏற்படுத்தக் கோரி மனு

கொண்டிச்செட்டிப்பட்டி குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு வழித்தட வசதி ஏற்படுத்தி தரக் கோரி, ஆட்சியா் ச.உமாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் - மோகனூா் சாலை, கொண்டிச்செட்டிப்பட்டி, கணபதி நக... மேலும் பார்க்க

நைனாமலை பெருமாள் கோயிலுக்கான சாலை பணி ஆய்வு

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு செல்வதற்கான சாலை பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். நாமக்கல் மற்றும் ராசிபுரம் ஒன்றியப் பகுதிகளில் தமிழக அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட... மேலும் பார்க்க

பிப். 11 வள்ளலாா் நினைவு தினம்: அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு மதுபானக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை (பிப். 11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தி... மேலும் பார்க்க