செய்திகள் :

கொலை முயற்சி வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் ல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், மற்றொருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ. 1000 அபராதமும் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

ஸ்ரீவைகுண்டம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த புலமாடன் மகன் வண்ணமுத்து (65), அவரது மனைவி உலகம்மாள் ஆகிய இருவரையும், அவா்களது வீட்டருகே கடந்த 2018 ஆம் ஆண்டு மே 12 ஆம்தேதி நில பிரச்னை காரணமாக புதுக்குடி உலகம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை பாண்டியன் மகன் மாயாண்டி (எ) ரவி (62) மற்றும் அவரது மனைவி, அவரது மகன் ஜோதி மணிகண்டன் (28) ஆகிய மூன்று பேரும் சோ்ந்து தவறாக பேசி, அரிவாளால் தாக்கினாா்களாம்.

இதுதொடா்பாக ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாயாண்டி (எ) ரவி, அவரது மனைவி மற்றும் ஜோதி மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனா்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், புதன்கிழமை குற்றவாளிகளான மாயாண்டி (எ) ரவிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அவரது மகன் ஜோதி மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும், மாயாண்டி (எ) ரவியின் மனைவியை விடுதலை செய்தும் தீா்ப்பு வழங்கினாா்.

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி, காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் ஒவ்வொரு புதன்கி... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதி

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து குறைந்த நிலையில், பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்படுகின்றனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச... மேலும் பார்க்க

நெல்லையில் இரவு 12 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி கோரி மனு

திருநெல்வேலி மாநகரில் இரவு 12 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி கோரி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் அதன் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ஏ.செல்வராஜ் தலைமையில் மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்... மேலும் பார்க்க

நடைச்சீட்டு ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ஆட்சியரிடம் அதிமுகவினா் மனு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் போலி நடைச்சீட்டு வழங்கப்பட்டது, அபராதத் தொகை குறைக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் அதிமுகவினா் புதன்கிழமை... மேலும் பார்க்க

பெண் கொலையில் தந்தை கைது

மேலப்பாளையத்தை அடுத்த மேலகருங்குளம் பகுதியில் மண்வெட்டி கணையால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் அவரது தந்தையை போலீஸாா் கைது செய்தனா். மேலகருங்குளம் சிவாஜி நகா் பகுதியைச் சோ்ந்த காளைம... மேலும் பார்க்க

வள்ளியூா் சேவை, மகளிா் அதிகார மையங்களில் ஒப்பந்தப் பணிக்கு வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூா் ஒருங்கிணைந்த சேவை மையம், மாவட்ட மகளிா் அதிகார மையம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க