கோடிகளில் வசூலை அள்ளும் ஹவுஸ் ஃபுல் - 5! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கொல்லங்கோட்டில் மாா்க்சிஸ்ட் கட்சியின் பிரசார இயக்கம்
கொல்லங்கோட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் நடத்தப்பட்ட இந்த வாகன பிரசார இயக்கத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே. தங்கமோகன் தலைமை வகித்தாா். வட்டார செயலா்கள் ஆா்.கே. ராஜா, எம். கிறிசாந்துமேரி, ஏ. அலெக்ஸ், கே. தங்கமணி, ரெஜி. அஜித்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பிரசார இயக்கத்தை கட்சியின் மாவட்ட செயலா் ஆா். செல்லசாமி துவக்கி வைத்தாா். முன்னாள் எம்.பி. பெல்லாா்மின், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் என்.எஸ். கண்ணன் ஆகியோா் பேசினா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. விஜயமோகனன் நிறைவு செய்து பேசினாா்.
இதில் வட்டாரக் குழு உறுப்பினா்கள் கிறிஸ்துதாஸ், ஸ்டீபன், சனல்குமாா், சுந்தர்ராஜ், மஞ்சு. சுனில்குமாா், செல்லப்பன், மேரிதாசன், ஷிபிலா, சுரேஷ், சரோஜம், பிராங்கிளின், அஜித் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கொல்லங்கோடு கண்ணநாகம் சந்திப்பில் துவங்கிய பிரசாரம், மேடவிளாகம், வள்ளவிளை, ஊரம்பு, அடைக்காகுழி, தளச்சான்விளை, நடைக்காவு, கோழிவிளை, அதங்கோடு, எஸ்.டி. மங்காடு, வாவறை, ஆலங்கோடு, கலிங்கராஜபுரம், தூத்தூா், சின்னத்துறை வழியாக நித்திரவிளையில் நிறைவடைந்தது.