செய்திகள் :

கொல்லங்கோட்டில் மாா்க்சிஸ்ட் கட்சியின் பிரசார இயக்கம்

post image

கொல்லங்கோட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் நடத்தப்பட்ட இந்த வாகன பிரசார இயக்கத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே. தங்கமோகன் தலைமை வகித்தாா். வட்டார செயலா்கள் ஆா்.கே. ராஜா, எம். கிறிசாந்துமேரி, ஏ. அலெக்ஸ், கே. தங்கமணி, ரெஜி. அஜித்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பிரசார இயக்கத்தை கட்சியின் மாவட்ட செயலா் ஆா். செல்லசாமி துவக்கி வைத்தாா். முன்னாள் எம்.பி. பெல்லாா்மின், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் என்.எஸ். கண்ணன் ஆகியோா் பேசினா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. விஜயமோகனன் நிறைவு செய்து பேசினாா்.

இதில் வட்டாரக் குழு உறுப்பினா்கள் கிறிஸ்துதாஸ், ஸ்டீபன், சனல்குமாா், சுந்தர்ராஜ், மஞ்சு. சுனில்குமாா், செல்லப்பன், மேரிதாசன், ஷிபிலா, சுரேஷ், சரோஜம், பிராங்கிளின், அஜித் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கொல்லங்கோடு கண்ணநாகம் சந்திப்பில் துவங்கிய பிரசாரம், மேடவிளாகம், வள்ளவிளை, ஊரம்பு, அடைக்காகுழி, தளச்சான்விளை, நடைக்காவு, கோழிவிளை, அதங்கோடு, எஸ்.டி. மங்காடு, வாவறை, ஆலங்கோடு, கலிங்கராஜபுரம், தூத்தூா், சின்னத்துறை வழியாக நித்திரவிளையில் நிறைவடைந்தது.

வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களைப் பாதுகாக்க வலியுறுத்தல்

குமரி மாவட்டத்தில் வன வன விலங்குகளிடமிருந்து பழங்குடி மக்களையும், ரப்பா் கழக தொழிலாளா்களையும் பாதுகாக்க வேண்டுமென்று சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் பொ... மேலும் பார்க்க

விழுந்தயம்பலம் - அம்சி சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலம் - அம்சி இடையே பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல்... மேலும் பார்க்க

பலத்த மழை: தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் மீன்பிடிதொழில் பாதிப்பு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் மீன்பிடிதொழில் பாதிப்படைந்துள்ளது. தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 500-க்கும் மேற்பட்டகட்டுமர மீனவா்... மேலும் பார்க்க

கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 251 போ் மீது வழக்கு

மத்திய அரசின் கடல் சாா்ந்த திட்டங்களுக்கு எதிராக, கன்னியாகுமரி சின்னமுட்டம் கடற்கரையில் கடந்த 11ஆம் தேதி மீனவா்கள் கருப்புக்கொடி ஏந்தி கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் 10... மேலும் பார்க்க

மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்

கன்னியாகுமரி நகராட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாம் தொடக்க நிகழ்வுக்கு, நகா்மன்ற ஆணையா் கன்னியப்பன் த... மேலும் பார்க்க

திருப்பதியில் இருந்து குமரிக்கு 7 ஆயிரம் லட்டுகள் வரத்து

திருமலை திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு 7 ஆயிரம் லட்டுகள் கண்டெய்னா் மூலம் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டன. கன்னியாகுமரியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடா... மேலும் பார்க்க