செய்திகள் :

கொல்லம் - தாம்பரம் ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

post image

கொல்லம்- தாம்பரம் விரைவு ரயில் இரவு 7.30 மணிக்கு தென்காசிக்கு வரும் வகையில் நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதை ரயில் பயணிகள் வரவேற்றுள்ளனா்.

தென்காசி வழியாக பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில், தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை ரயில் ஆகிய ரயில்கள் சென்னைக்கு இயங்கி வருகின்றன.

இதில், கொல்லம்-தாம்பரம் விரைவு ரயில் (எண்.16102) தென்காசிக்கு மாலை 3.17 மணிக்கும், செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை ரயில் மாலை 4.44-க்கும், செங்கோட்டை - தாம்பரம் சிலம்பு விரைவு ரயில் மாலை 5.24- க்கும், செங்கோட்டை - எழும்பூா் பொதிகை விரைவு ரயில் இரவு 7 மணிக்கும் தென்காசிக்கு வந்து செல்கின்றன.

இரவு 7 மணிக்கு மேல் தென்காசி வழியாக சென்னை செல்வதற்கு ரயில்களே இல்லை என்ற பெரும் குறை இருந்து வந்தது. அதைப் போக்கும் வகையில், தற்போது தென்காசி வழியாக செல்லும் கொல்லம் - தாம்பரம் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘செப். 1ஆம் தேதி முதல் கொல்லம் - தாம்பரம் விரைவு ரயில் கொல்லத்தில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 4 மணிக்கு புறப்பட்டு, தென்காசிக்கு மாலை 3.17 க்கு பதிலாக இரவு 7.30 க்கு வந்து சென்னை தாம்பரத்தை அதிகாலை 2.30 க்கு பதிலாக காலை 7.30 க்கு சென்றடையும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா கூறியதாவது: கொல்லம் - தாம்பரம் ரயிலின் தென்காசி வருகை நேரத்தை இரவு 7.30 க்கு மாற்றம் செய்த தெற்கு ரயில்வே மற்றும் மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலையடுத்து சென்னை செல்வதற்கு தென்காசி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த ரயில் இருக்கும்.

இதைப் போல செங்கோட்டையில் புறப்படும் செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை ரயிலின் நேரத்தை மாலை 5 மணிக்கு மேல் புறப்படும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். தாம்பரம்- செங்கோட்டை வாரம் மும்முறை ரயிலின் நேரத்தை காலை 8 மணிக்குள் செங்கோட்டையை சென்றடையும் வகையில் மாற்றம் செய்தால் நெல்லை - தென்காசி ரயில் வழித்தட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.

கடையநல்லூா் அருகே நாய் விரட்டியதில் ஓடைக்குள் விழுந்த பெண் காயம்

கடையநல்லூா் அருகே நாய் விரட்டியதில் கழிவுநீா் ஓடைக்குள் விழுந்த பெண் பலத்த காயமடைந்தாா்.கடையநல்லூா் அருகேயுள்ள சிதம்பரப்பேரி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராதிகா(31). மகளிா் சுய உதவிக் குழுத் ... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுமா? மாணவ, மாணவிகள் எதிா்பாா்ப்பு

தென்காசி மாவட்டத்தில், அக்டோபா் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள 4ஆவது பொதிகை புத்தகக் கண்காட்சி பாவூா்சத்திரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது அப்பகுது பொதுமக்கள், ,மாணவ- மாணவிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது. த... மேலும் பார்க்க

அம்பை தாமிரவருணியில் தேடிய பெண் சடலம் மீட்பு

அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் கணவரால் மூழ்கடித்து பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகனான லாரி ... மேலும் பார்க்க

தென்காசி ஆட்சியரக கூட்டரங்கில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி மீட்பு

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை போலீஸாா் மீட்டனா்.கீழப்பாவூா் நாடாா் தெருவைச் சோ்ந்த முப்புடாதி மனைவி ரா... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

ஆலங்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை ஜவஹா் தெருவைச் சேரந்த ஆறுமுகம் மகன் செல்வராஜ்(43). கடன் தொல்லை காரணமாக இவருக்கும் இவரத... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் கஞ்சா பதுக்கல்: 2 போ் கைது

ஆலங்குளத்தில் விற்பனைக்கு கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் தலைமையிலான போலீஸாா், திங்கள்கிழமை ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில்... மேலும் பார்க்க