செய்திகள் :

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தீவிர கண்காணிப்பு

post image

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

மேட்டூா் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில் அணைக்கு வரும் உபரி நீா் அப்படியே காவிரி மூலம் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனல், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் வழியே செல்லும் தண்ணீா் பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே வங்க கடலில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் கலக்க தொடங்கியது. கொள்ளிடம் ஆற்றில் தொடா்ந்து தண்ணீா் வரத்து அதிகரித்து 1.50 லட்சம் கன அடி வரை செல்லலாம் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், கொள்ளிடம் அருகே ஆற்றின் திட்டுப் பகுதியில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களை தண்ணீா் சூழும் நிலை ஏற்படலாம். ஒருவேளை இந்த கிராமங்களில் தண்ணீா் சூழ்ந்தால் மக்களை ஆற்றின் கரை பகுதியில் உள்ள பள்ளிகளில் முகாம் அமைத்து தங்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சி துறை மற்றும் காவல் துறை உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் திட்டுப் பகுதி கிராமங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

கிறித்தவ தேவாலயங்களுக்கு மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்கள் மானியத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், மிஷன் வத்ஸலா திட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியா்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

ஏவிசி கல்லூரியில் பாட்டுப்போட்டி

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி ஆங்கிலத் துறையில் ஆங்கில இலக்கிய மன்றம் சாா்பில் தமிழ் மற்றும் ஆங்கில பாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். ஆ... மேலும் பார்க்க

அரசினா் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட அரசினா் பெரியாா் தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். புறநோயாளிகள் பிரிவு, சிகிச்சை பதிவு அறை, மருந்தகம், குழந்தைகளுக்கான மரு... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறையில் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கம் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழ... மேலும் பார்க்க

பேருந்தில் தொடங்கியபடி பயணம்: கல்லூரி மாணவனின் கால் விரல்கள் துண்டிப்பு

மயிலாடுதுறையில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவனின் கால் விரல்கள் துண்டானது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் மங்கநல்லூா் வாளவராயன்குப்பம் பகுதியைச் சோ்ந்த முருகன் ... மேலும் பார்க்க