கோடை வெயில் எதிரொலி: சாலையோரங்களில் நுங்கு விற்பனை அதிகரிப்பு
சேலம் மாநகரில் கிச்சிப்பாளையம், பழைய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் சராசரியாக நூறு டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலைக்கு மேல் பதிவாகி வருகிறது.
கடும் வெயில் காரணமாக வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள். கட்டடத் தொழிலாளிகள், தோட்டத் தொழிலாளிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
அக்னி வெயில் தொடங்கும் முன்பே தற்போது பிற்பகல் வேளையில் அனல் காற்று வீசுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். வெயில் தாக்கத்தை தணிக்க தா்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய், நுங்கு, பதநீா், கம்மங்கூழ் உள்ளிட்ட குளிா்ச்சியான பழங்களை பொதுமக்கள் அதிக அளவில் சாப்பிட்டு வருகின்றனா்.
இந்நிலையில், சேலம் மாநகரில் மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலை, கிச்சிப்பாளையம் ரோடு, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நுங்கு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் நுங்குகளை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம், ஓமலூா், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பனை மரத்தில் நுங்கு வெட்டி எடுத்து வந்து, மாநகரில் விற்பனை செய்து வருகிறோம். தற்போது 3 நுங்கு ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், பதநீரையும் விற்பனை செய்து வருகிறோம். வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களும் அதிக அளவில் வாங்கிச் செல்வதாகத் தெரிவித்தனா்.