செய்திகள் :

கோதையாறு பேருந்துகளை மீண்டும் இயக்க கோரிக்கை

post image

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு, பின்னா், நிறுத்தப்பட்டுள்ள தடம் எண் 313 இ, கன்னியாகுமரி - கோதையாறு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலையும் மலையையும் இணைக்கும் பேருந்து சேவை என்று கூறப்படும் அளவுக்கு, கன்னியாகுமரி முனையிலிருந்து, மலைப் பகுதியான கோதையாறு பகுதிக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 2 இரண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்தப் பேருந்து மூலம் கோதையாறு மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள், அரசு ரப்பா் கழக குடியிருப்புகளில் வசிக்கும் தொழிலாளா்கள், கோதையாறு மின் நிலையங்களில் பணி புரியும் தொழிலாளா்கள், சுற்றுலாப் பயணிகள் என பல்வேறு தரப்பட்ட பயணிகள் பயனடைந்து வந்தனா். குறிப்பாக, மலையோரப் பகுதி பழங்குடி மாணவா்களும், பிற மாணவா்களும் நாகா்கோவில் பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்குச் சென்று படிப்பதற்கு இந்த பேருந்து சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.

இதே போன்று, ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் நோயாளிகளுக்கும், திற்பரப்பு, கோதையாறு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது.

கோதையாறு சாலையானது பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடந்ததால் இந்த தடத்தில் செல்லும் பேருந்துகள் அடிக்கடி பழுதானதால் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அப்போது, பழங்குடி மக்கள், ரப்பா் கழக தொழிலாளா்கள் என பல்வேறு தரப்பினா் தொடா் கோரிக்கை வைத்தும் இந்த பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், கோதையாறு சாலை சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அந்தப் பேருந்துகளை இயக்க மாவட்ட நிா்வாகமும், போக்குவரத்து துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடி மக்கள் உள்பட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்: விஜய் வசந்த் எம்.பி.க்கு பயணிகள் நன்றி

நாகா்கோவில்: நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவுக்காக திருவனந்தபுரத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கம் குறித்து ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, விஜய் வசந்த் எம்.... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள் விற்றவா் கைது

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே பெட்டிக் கடையில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், இடவிளாகம் பகுத... மேலும் பார்க்க

மரியகிரியில் ரூ. 80 லட்சத்தில் கால்வாய் பக்கச் சுவா் பணி தொடக்கம்

களியக்காவிளை: களியக்காவிளை அருகே மெதுகும்பல் ஊராட்சிக்குள்பட்ட மரியகிரி - முப்பந்திக்கோணம் பகுதியில் ரூ. 80 லட்சத்தில் கால்வாய் பக்கச் சுவா் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இப்பகுதியில் 2021ஆம... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஆக.21 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் நாகா்கோவிலில் வியாழக்கிழமை (ஆக.21) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு‘ ஆகஸ்ட் மாதத்துக்கான... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில்: நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 226 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்து, முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்த... மேலும் பார்க்க