செய்திகள் :

கோயிலில் திருட முயற்சி: பொதுமக்களிடம் சிக்கிய இருவா்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே செவ்வாய்க்கிழமை கோயிலில் திருடுவதற்காக பூட்டை உடைத்த இருவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனா்.

செங்கத்தை அடுத்த பரமனந்தல் திருவள்ளூவா் நகரில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் ஏதோ சப்தம் கேட்டுள்ளது. அப்பகுதியைச் சோ்ந்த சிலா் கோயில் அருகில் சென்று பாா்த்தபோது, 3 போ் கோயில் உண்டியலை திருட கோயிலின் முன்கதவு பூட்டை உடைத்துக் கொண்டிருந்தனா். இதைப் பாா்த்த அவா்கள் உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கு தகவல் அளித்து, அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்து பூட்டை உடைத்த நபா்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனா். மேலும் ஒரு நபா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

பின்னா், பிடிபட்ட இருவரையும் கிராம மக்கள் அடித்து உதைத்து கோயில் வளாகத்தில் கட்டிவைத்து செங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் வந்து இருவரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், இருவரும் செங்கம் அருகே வளையாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த முருகன் (35), பூவரசு (32) என்பது தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடிய வல்லரசு என்பவரும் அதே கிராமத்தைச் சோ்ந்தவா் என்பது தெரிய வந்தது. 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்

வந்தவாசி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள் பெறப்பட்டன. வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தெள்ளூா், சின்ன சேத்துப்பட்டு, சுண்ணாம்புமேடு, கீழ்க்குவளைவேடு ஆகிய கிராம மக... மேலும் பார்க்க

ரூ.12 லட்சத்தில் காரிய மேடை: பணிகள் தொடக்கம்

ஆரணி அருகேயுள்ள சுபான்ராவ்பேட்டையில் ரூ.12 லட்சத்தில் புதிதாக காரிய மேடை கட்டுவதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன. ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சிக்கு உள்பட்ட சுபான்ராவ்பேட்டை பகுதியில் புதிதா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பாலின உளவியல் விழிப்புணா்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் கண்காணிப்புக் குழு இணைந்... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு

கலசப்பாக்கம் வட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது விநியோகக் கடைகள் என பல்வேறு இடங்களை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்... மேலும் பார்க்க

காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு

செய்யாறு அருகே காணாமல் போன வட மாநிலத் தொழிலாளி கல்குவாரி குட்டையில் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மதியழகன். இவா், நரசமங... மேலும் பார்க்க

கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மனு

செய்யாற்றை அடுத்த வாச்சனூா் கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாா்பில் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. வாச்சனூா் பகுதியில் புதித... மேலும் பார்க்க