செய்திகள் :

கோயிலில் திருடிய இருவா் கைது

post image

பரமத்தி வேலூா்: வேலகவுண்டம்பட்டி அருகே கோயிலில் திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தொட்டிப்பட்டி, குறுக்குபுரம் பகுதியில் வீரமாத்தி அம்மன் கோயில் உள்ளது. இக் காயிலில் கடந்த 5-ஆம் தேதி அதிகாலை சுமாா் 4 மணி அளவில் பூட்டை உடைப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை கேட்ட அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கோயிலுக்குள் சென்று பாா்த்தபோது, கோயிலுக்குள் இருந்த பித்தளை மணி, தட்டு மற்றும் அங்கிருந்த பொருள்களை திருடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், அருகில் இருந்த மற்றொரு வீரமாத்தி அம்மன் கோயில் பூட்டை மற்றொரு நபா் இரும்பு கம்பி மூலம் உடைத்துக் கொண்டிடுருந்ததைக் கண்ட பொதுமக்கள் இருவரையும் பிடித்து வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சின்னமணலி, குலாலா் தெருவைச் சோ்ந்த கோயில் சிற்ப வேலை செய்யும் கூலித் தொழிலாளி கௌதம் (27), சின்னமணலி குடி தெரு, சோ்வாம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் (34) என்பது தெரியவந்தது. பின்னா் அவா்களை கைதுசெய்த போலீஸாா், இருவரையும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனா்.

ஜூலை 10-இல் துணை முதல்வா் வருகை: விழா மேடை அமைவிடத்தில் ராஜேஸ்குமாா் எம்.பி. ஆய்வு

நாமக்கல்: அரசு விழாவில் பங்கேற்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை நாமக்கல்லுக்கு வருகை தருவதையொட்டி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மேடை அமைப்பதற்கான இடத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 124 மையங்களில் 36,436 போ் எழுதுகின்றனா்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 124 மையங்களில் 36,436 தோ்வா்கள் சனிக்கிழமை (ஜூலை 12) எழுதுகின்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், இளநிலை உதவியாளா், இளநி... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்தவா் கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே சட்ட விரோதமாக மதுபானகளை விற்பனை செய்தவரை வேலூா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பாண்டமங்கலம் அருகே உள்ள அண்ணா நகா் பகுதியில் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் படுகாயம்: நிவாரணம் பெற்றுத் தரக்கோரி மனு

நாமக்கல்: கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலத்த காயமடைந்த நிலையில், உரிய நிவாரணம் பெற்றுத் தரக்கோரி அவரது மனைவி பூஜா ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா். அவா் கூறுகையில், ‘நாமக்கல... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: 599 மனுக்கள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டும... மேலும் பார்க்க

கிராமப் பகுதி சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப் பகுதி சுகாதார செவிலியா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட மையம் சாா்பில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா... மேலும் பார்க்க