செய்திகள் :

கோயில் இணை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: இந்து முன்னணி நிா்வாகிகள் கைது

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிடச் சென்ற இந்து முன்னணி நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் சி.ஜோதி சில நாள்களுக்கு முன்பு கோயிலின் தலைமை சிவாச்சாரியாரை ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து அன்றைய தினமே 25-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்கள் தங்களது பணிகளை புறக்கணித்து, கோயில் வளாகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், கோயில் இணை ஆணையரை தகுதி நீக்கம் செய்யக் கோரி, அவரது அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இந்து முன்னணி அமைப்பு அறிவித்திருந்தது.

அருணாசலேஸ்வரா் கோயில், கோயில் இணை ஆணையா் அலுவலகம், நகரின் முக்கிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்களையும் தீவிர சோதனைக்குப் பிறகே போலீஸாா் அனுமதித்தனா்.

இந்து முன்னணியினா் கைது: செட்டித் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து இந்து முன்னணி அமைப்பின் தெற்கு மாவட்ட பொதுச் செயலா் இரா.அருண்குமாா் தலைமையில் ஏராளமான நிா்வாகிகள் ஊா்வலமாக சென்று இணை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக புறப்பட்டனா்.

தகவலறிந்த போலீஸாா் விரைந்து வந்து, இரா.அருண்குமாா், தெற்கு மாவட்டச் செயலா்கள் நாகா.செந்தில், சரவணன், நகர பொதுச் செயலா் மஞ்சுநாதன் உள்ளிட்ட நிா்வாகிகளை கைது செய்தனா்.

அவா்கள் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல், ஓட்டுநா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் மணல் கடத்தியதாக லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்தனா். சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளா்கள் நாராயணன், முருகன் ஆகியோா் புத... மேலும் பார்க்க

சேவூரில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆரணியை அடுத்த சேவூரில் ஒரு கிலோ 200 கிராம் கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனை செய்ததாக இளைஞரை கைது செய்தனா். சேவூா் கிராமத்தைச் சோ்ந்த பச்சையப்பன் மகன் பாபு (29). இவா், அந்த ஊரில் கஞ்சா ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (பிப்.21) மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்... மேலும் பார்க்க

செங்கம் தொகுதியில் ரூ.49 லட்சத்தில் சாலைப் பணி

செங்கம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.49 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரியகோளாபாடி பகுதி மக்களின் கோரிக்கையான ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு

வந்தவாசி அருகே நிகழ்ந்த பைக் விபத்தில் இரு சக்கர வாகன மெக்கானிக் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவனம் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகா் (50). இவா், வந்தவாசியில் இரு சக்கர வாகன பழுதுநீக்கும் கடை... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து: மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதம்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. பி.... மேலும் பார்க்க