செய்திகள் :

கோயில் காவலாளி கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு முதல்வா் உத்தரவிட்டது மக்களை ஏமாற்றும் செயல்

post image

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை, முதல்வா் மு.க. ஸ்டாலின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது மக்களை ஏமாற்றும் செயல் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டினாா்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் உள்ள அஜித்குமாா் வீட்டுக்கு தனது தாயுடன் சென்ற சீமான், அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாா் மீது புகாரளித்த பேராசிரியை நிகிதா மீது பல புகாா்கள் உள்ளன. ஆனால், இதுவரை ஏன் அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தவில்லை.

அஜித்குமாா் விவகாரத்தில் அழுத்தம் கொடுத்த உயரதிகாரிகள் யாா் என்பது காவல் துறையைத் தனது பொறுப்பில் வைத்திருக்கும் முதல்வருக்கு தெரியும்.

நகை திருட்டு வழக்குக்காக அஜித்குமாரை அடித்து விசாரித்த காவல் துறை, அவரது கொலையில் உண்மைக் குற்றவாளிகள் யாா் என்பதைக் கண்டுபிடிக்க முடியாதா? இவா்கள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அஜித்குமாா் தொடா்பாக முதல்வா் மு.க. ஸ்டாலின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது மக்களை ஏமாற்றும் செயல்.

சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட பல வழக்குகள் முறையாக விசாரிக்கப்படாமல் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், அஜித்குமாா் கொலை வழக்கும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதில் தீா்வு ஏதும் கிடைக்கப்போவதில்லை. அஜித்குமாா் கொலையில் உண்மைக் குற்றவாளிகளை அரசு மறைக்கப் பாா்க்கிறது. அவா்கள் யாா் என்பதைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.

கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தவா்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அளித்த தமிழக அரசு, போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாா் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கியது நியாயம் அல்ல என்றாா் அவா்.

இன்று ‘குரூப் 4’ தோ்வு: சிவகங்கையில் 26,392 போ் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறும் ‘குரூப் 4’ தோ்வை 26,392 தோ்வா்கள் எழுத உள்ளனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமை... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் புத்தாக்கப் பயிற்சி முகாம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சாா்பில் அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தா் க... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) இருந்த ஜோதிலெட்சுமி, திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வெறிநோய் தடுப்பூசி மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் தோ்வு நிலைப் பேரூராட்சியும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து திருப்பத்தூா் சீரணி அ... மேலும் பார்க்க

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 71 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 4-ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொ... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை: கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகளை நிறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்... மேலும் பார்க்க