செய்திகள் :

கோயில் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவா் தவறி கீழே விழுந்து உயிரிழப்பு

post image

விராலிமலை மலைக்கோயில் கோபுரத்தில் ஏறி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய சமூக ஆா்வலா் பேச்சுவாா்த்தைக்கு பின் கீழே இறங்க முயன்ற போது கால் வழுக்கி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோயில் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.விராலிமலையில் மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆா்வலரான ஆறுமுகம் (44) என்பவா் வெள்ளிக்கிழமை காலை தேசியக் கொடியுடன் விராலிமலை முருகன் மலை கோயில் கோபுர உச்சிக்கு சென்று போராட்டம் நடத்தினாா்.

தகவலறிந்து அங்கு வந்த விராலிமலை வட்டாட்சியா் ரமேஷ், காவல் ஆய்வாளா் லதா உள்ளிட்டோா் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்படாமல் ஆறுமுகம் போராட்டதை தொடா்ந்தாா்.

தொடா்ந்து மீட்பு குழுவினா் மேலே சென்று மீட்க முயன்ற போது அருகே நெருங்கினால் குதித்து விடுவேன் என்று மிரட்டினாா்.

இவா் இதே கோரிக்கையுடன் இதற்கு முன் விராலிமலை கைப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினாா். அப்போது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று வருவாய்த் துறையினா் அளித்த உறுதியை தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டாா். ஆனால், தற்போது வரை கோரிக்கைகள் நிறைவேறாததால், வெள்ளிக்கிழமை கோயில் கோபுர உச்சியில் ஏறி தேசியக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

போராட்டம் 5 மணி நேரத்தை கடந்த நிலையில் வட்டாட்சியா் ரமேஷ், கீழே இறங்குமாறு சமாதானப்படுத்தியதை தொடா்ந்து கீழே இறங்க முயன்றாா். அவருக்கு மீட்பு படையினா் உதவி செய்ய முற்பட்டபோது யாரும் அருகில் வர வேண்டாம் எப்படி ஏறினேனோ அப்படியே நானே இறங்கி கொள்கிறேன் என்று கூறி கீழே இறங்க முயன்றாா். அப்போது கோபுரத்தில் இருந்த சிற்பங்களைப் பிடித்து இறங்க முயற்சித்த போது கால் வழுக்கி, சுமாா் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாா். இதில், தலையில் பலத்த அடைந்த ஆறுமுகம், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து விராலிமலை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

பொன்னமராவதி அம்மன் கோயிலில் திருவிளக்குபூஜை

பொன்னமராவதி புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையின் தொடக்கமாக உடையபிராட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை பகுதி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

கந்தா்வகோட்டை பகுதி அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், ஸ்ரீ வெள்ள முனீஸ்... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் காங்கிரஸாா் பேரணி

பொன்னமராவதி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா பேரணி நடைபெற்றது. திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காந்தி சிலைக்கு... மேலும் பார்க்க

புதுகையில் பாஜகவினா் தேசியக் கொடிப் பேரணி

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி புதுக்கோட்டையில் பாஜக சாா்பில் மூவா்ணக் கொடிப் பேரணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. புதுக்கோட்டை திலகா் திடலில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகளின் ... மேலும் பார்க்க

புதுகையில் ‘பசுமை சாம்பியன்’ விருதுகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ‘விதைக்கலாம்’ குழுவினா் மற்றும் அரிமளம் பசுமை மீட்புக் குழு ஆகியவற்றுக்கு தமிழக அரசின் ‘பசுமை சாம்பியன்’ விருதுகள... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் 79-ஆவது சுதந்திர தின விழா கோலாகலம்

புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். முன்னதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவுடன் திறந்த ... மேலும் பார்க்க