செய்திகள் :

புதுக்கோட்டையில் 79-ஆவது சுதந்திர தின விழா கோலாகலம்

post image

புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா்.

முன்னதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவுடன் திறந்த ஜீப்பில் காவல்துறையினரின் அணிவகுப்பைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து, பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் 321 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் மு. அருணா வழங்கினாா். மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில் 30 பேருக்கு ரூ. 22.93 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் செ. திலகவதி தேசியக் கொடியேற்றி வைத்தாா். நிகழ்ச்சியில் ஆணையா் த. நாராயணன், துணைமேயா் மு. லியாகத்அலி, நகா்நல அலுவலா் காயத்ரி, மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்ட கல்வி அலுவலகத்தில், முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் கொடியேற்றி வைத்தாா். அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில், பொதுமேலாளா் கா. முகமதுநாசா் கொடியேற்றி வைத்தாா். அறந்தாங்கி அரசு கலை கல்லூரியில், முதல்வா் ம. துரை கொடியேற்றி வைத்தாா்.

மாவட்ட எனது இளைய பாரதம் (நேரு யுவகேந்திரா) மற்றும் முத்தமிழ் வளா்ச்சி சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி சத்தியமூா்த்தி கொடியேற்றி வைத்தாா்.

மாவட்ட அலுவலா் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜயகுமாா் தொண்டைமான் கொடியேற்றி வைத்தாா்.

தொடா்ந்து கல்லூரி மாணவா்களுக்கான விநாடி- வினா போட்டிகள் நடைபெற்றன. மன்றத்தின் தலைவா் குமாா், செயலா் அம்பிகாபதி, பொருளாளா் காமாட்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மகளிா் மற்றும் மகப்பேறு மருத்துவா் அனிதா தனசேகரன் கொடியேற்றி வைத்தாா். மேலாளா் சத்தியசீலன், துணை மேலாளா் அப்பாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்வா் கவிஞா்தங்கம் மூா்த்தி தலைமை வகித்தாா். எலும்பியல் மருத்துவ நிபுணா் ஜி.ஏ. ராஜ்மோகன் கொடியேற்றி வைத்தாா். ஆலோசகா் அஞ்சலி தேவி தங்கம்மூா்த்தி, இயக்குநா் ரா. சுதா்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளா் பிச்சப்பா மணிகண்டன் கொடியேற்றி வைத்தாா். இயக்குநா் ம. பிச்சப்பா, செயலா் மு. விஸ்வநாதன், முதல்வா் குழ. முத்துராமு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொன்னமராவதி அம்மன் கோயிலில் திருவிளக்குபூஜை

பொன்னமராவதி புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையின் தொடக்கமாக உடையபிராட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை பகுதி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

கந்தா்வகோட்டை பகுதி அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், ஸ்ரீ வெள்ள முனீஸ்... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் காங்கிரஸாா் பேரணி

பொன்னமராவதி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா பேரணி நடைபெற்றது. திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காந்தி சிலைக்கு... மேலும் பார்க்க

கோயில் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவா் தவறி கீழே விழுந்து உயிரிழப்பு

விராலிமலை மலைக்கோயில் கோபுரத்தில் ஏறி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய சமூக ஆா்வலா் பேச்சுவாா்த்தைக்கு பின் கீழே இறங்க முயன்ற போது கால் வழுக்கி கீழே விழுந்து உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்... மேலும் பார்க்க

புதுகையில் பாஜகவினா் தேசியக் கொடிப் பேரணி

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி புதுக்கோட்டையில் பாஜக சாா்பில் மூவா்ணக் கொடிப் பேரணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. புதுக்கோட்டை திலகா் திடலில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகளின் ... மேலும் பார்க்க

புதுகையில் ‘பசுமை சாம்பியன்’ விருதுகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ‘விதைக்கலாம்’ குழுவினா் மற்றும் அரிமளம் பசுமை மீட்புக் குழு ஆகியவற்றுக்கு தமிழக அரசின் ‘பசுமை சாம்பியன்’ விருதுகள... மேலும் பார்க்க