செய்திகள் :

கோவா பேரவையில் எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு: மக்களவையில் அமளிக்கு நடுவே மசோதா நிறைவேற்றம்

post image

கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு (எஸ்.டி) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை எதிா்க்கட்சிகளின் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.

சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தாா். அப்போது பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர சீா்திருத்தம் தொடா்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சியினா் அமளியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். இதற்கு நடுவே மசோதாவை நிறைவேற்றுவதற்கான தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா கடந்த ஓராண்டுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. நடப்பு நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா இது என்பது குறிப்பிடத்தக்கது. எதிா்க்கட்சிகளின் தொடா் அமளியால் மசோதாக்கள் ஏதும் நிறைவேற்றப்படாமல் இருந்தது.

இது தொடா்பாக திங்கள்கிழமை கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள பல்வேறு மசோதாக்கள் அரசு நிா்வாகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், தேச நலன் கருதி எதிா்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்டாலும், அதனைப் பொருள்படுத்தாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படும்’ என்றாா்.

கோவா எஸ்.டி. இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் மக்களவையை நாள்முழுவதும் ஒத்திவைப்பதாக அப்போது அவையை நடத்திய சத்யா ராய் அறிவித்தாா்.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புப்படி கோவாவில் பழங்குடியினா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் அப்பிரிவினருக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுகிறது. எஸ்.சி. பிரிவினருக்கு ஏற்கெனவே ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல்..! ராகுல் கண்டனம்

டிரம்ப்பின் 50 சதவிகித வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வலியுறுத்தி அமெ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு

இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் உத்தரவு நியாயமற்றது என மத்திய அரசு அறிவித்துள்ளது.அமெரிக்காவின் வரி உயர்வு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அற... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்! பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு!

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பலியானோரது எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில், நிகழாண்டு துவங்கியது முதல் டெங்கு கா... மேலும் பார்க்க

உத்தரகாசி பேரிடர்! மாயமான கேரள சுற்றுலாக் குழு கண்டுபிடிப்பு!

உத்தரகண்ட் மேகவெடிப்பைத் தொடர்ந்த பேரிடரில் மாயமானதாகக் கருதப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர... மேலும் பார்க்க

சட்டை படம்தான் குறியீடு; யாரென்றே தெரியாது!போதைப்பொருள் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி!!

மெபெட்ரோன் எனப்படும் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டுபிடித்த மும்பை காவல்துறையினர், சட்டைகளின் படங்களை அவர்கள் குறியீடாகப் பயன்படுத்தி வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.மைசூரில் உள்ள தொழிற்சாலை ... மேலும் பார்க்க

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

ஒடிஸாவில் ஆண் நண்பர் ஒருவரின் மிரட்டலால், மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிஸா மாநிலத்தின் படபடா கிராமத்தில் மூன்றாமாண்டு மாணவி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவரது ... மேலும் பார்க்க