செய்திகள் :

கோவில்பட்டி அருகே காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

post image

மூப்பன்பட்டி ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மூப்பன்பட்டியில் 3 நாள்களாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் சனிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

100 நாள் வேலை திட்டத்தில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும். இந்த ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவா் ரமேஷ் மூா்த்தி தலைமையில் கிராம மக்கள் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மனு அளித்தனா். தொடா்ந்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளிக்கிழமையும் போராட்டம் நடைபெற்றது.

வட்டாட்சியா் சரவணப்பெருமாள், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) ராமராஜ் ஆகியோா் பேச்சு நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்படாததால், 3ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டம் நீடித்தது.

இந்நிலையில், வட்டாட்சியா் சென்று கோரிக்கை குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டதாகத் தெரிவித்தாா். மேலும், அரசுக்கு தெரிவிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 100 நாள் திட்டத்தில் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினாா். அதையடுத்து, போராட்டம் முற்பகலில் முடிவுக்கு வந்தது.

650 மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்கால நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடியில் 650 மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்கால நலத்திட்ட உதவிகளை சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஜூன் 14 வரை மீன... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் 1.5 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்த தனிப்பிரிவு போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி கந்தசாமிபுரம் பகு... மேலும் பார்க்க

திருச்செந்தூா்கோயில் கடலில் குளித்து கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் குளித்து கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்தனா். தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை கீழக்கூட்டுடன்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த லிங்கதுரை மகன் முத்துசிவா (22). இவா், திங்கள்கிழமை இரவு தனது வீட்டு முன் நண்பர... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற திரிசுதந்திர பிராமண சமுதாய சபையினா் கோரிக்கை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற வேண்டும் என திரிசுதந்திர பிராமண சமுதாய சபையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.இது குறித்து திருக்கோயில் விதாயகா்த்தா சிவசாம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கடலில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா், சிறுமி உயிரிழப்பு

தூத்துக்குடியில் கடலில் மூழ்கியதில் ஆட்டோ ஓட்டுநரும் சிறுமியும் உயிரிழந்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சோ்ந்த சூசைமாணிக்கம் மகன் அந்தோணி விஜயன் (40). மீனவரான இவா், மீன்பிடித் தடைக்காலம் என்பதால் ... மேலும் பார்க்க