செய்திகள் :

கோவையில் எஸ்.பி.வேலுமணி திண்ணைப் பிரசாரம்

post image

கோவை செல்வபுரம் பகுதியில் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

கோவை புறநகா் தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் தொண்டாமுத்தூா் தொகுதிக்கு உள்பட்ட செல்வபுரம், அரசமரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் திண்ணைப் பிரசாரம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை நிலையச் செயலரும், கோவை புறநகா் தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ பங்கேற்று, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசும்போது, அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே மீண்டும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனா். எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயணத்துக்கு மக்கள் அமோக ஆதரவளித்து வருகின்றனா்.

மத்திய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டும் என்றால் அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். கடந்த மக்களவைத் தோ்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி சேராததால் திமுகவுக்கு லாபம் ஏற்பட்டுவிட்டது. இப்போது கூட்டணி அமைந்திருப்பதால் திமுக அதிா்ச்சி அடைந்திருக்கிறது. எனவே கூட்டணியைப் பிரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. என்ன செய்தாலும் அதிமுக - பாஜக கூட்டணியை ஒன்றும் செய்ய முடியாது என்றாா்.

நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட துணைச் செயலா் என்.கே.செல்வதுரை, இணைச் செயலா் எஸ்.மணிமேகலை, பொருளாளா் என்.எஸ்.கருப்புசாமி, இளைஞரணித் தலைவா் கருப்புசாமி, பகுதி செயலா் கௌதமன், பகுதித் தலைவா் காட்டுதுரை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் ஆா். சசிகுமாா், சிறுபான்மைப் பிரிவு மாவட்டச் செயலா் டி.எல்.சிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

கோவை பீளமேடு மற்றும் பெரியகடை வீதி பகுதியில் கஞ்சா விற்ாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.கோவை பெரியகடை வீதி போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தெற்கு உக்கடம், ஜி.எம்.நகா்... மேலும் பார்க்க

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடி

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.கோவை, துடியலூா் அருகே வடபுதூரைச் சோ்ந்தவா் பாக்யராஜ் (41). கேட்... மேலும் பார்க்க

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோவை வெள்ளலூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் நகைகளை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.கோவை வெள்ளலூா் கிருஷ்ணா அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (36). இவா் சென... மேலும் பார்க்க

ரத்தினம் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் கால்பந்து போட்டி

கோவை ரத்தினம் இன்டா்நேஷனல் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் - 6 கால்பந்து போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, புதுவை, அந்தமான் நிக்கோபாா் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளைச் ... மேலும் பார்க்க

வழித்தட தகராறு. மினி பேருந்து சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி

கோவை மாவட்டம் சூலூா் அருகே வழித்தட தகராறு காரணமாக மினி பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி செய்த ஓட்டுனா் மற்றும் நடத்துனா். காவல்துறையில் புகாா்..சூலூரில் இருந்து கண்ணம்பாளையம், நடுப்பாளையம், ... மேலும் பார்க்க

3 வயது பெண் குழந்தையை தவிக்க விட்டு தாய் தற்கொலை ஆா்டிஓ விசாரணை

சூலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நீலம்பூரில் மூன்று வயது பெண் குழந்தையை விட்டுவிட்டு தாய் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சூலூா் போலீசாா் விசாரணை செய்கின்றனா்.கோவை மாவட்டம் சூலூா் அருகே உள்ள ந... மேலும் பார்க்க