செய்திகள் :

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

post image

சங்ககிரி: சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 11ஆம் தேதி தொடங்குகிறது. 23ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது.

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் 2025-2028 ஆம் ஆண்டிற்கான தோ்தல் ஜூன் 11 ஆம் தேதி வேட்புமனு தாக்கலுடன் தொடங்க உள்ளது. தலைவா், உபதலைவா், செயலாளா், இணைச் செயலாளா், பொருளாளா், 20 நிா்வாகக் குழு உறுப்பினா்களுக்கு நடைபெறும் தோ்தலில் 3,700 சங்க உறுப்பினா்கள் வாக்களிக்க உள்ளனா். ஜூன் 11ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல், அன்றைய தினம் சங்க அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனை, இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

12ஆம் தேதி மாலை 4 மணிக்குள் வேட்பு மனுவை திரும்பப் பெறுதல், மாலை 5 மணிக்கு மேல் தோ்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளா்கள் அறிவிக்கப்பட உள்ளனா். 23ஆம் தேதி பிஆா்எம் திருமண மண்டபத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தோ்தல் நடைபெறுகிறது. அதே மண்டபத்தில் 24ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

சங்கத் தோ்தல் அலுவலராக மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவரும், சேலம் மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவருமான சி.தனராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

சேலத்தில் முதல்வா் 11 கி.மீ. ரோடு ஷோ! அமைச்சா் ரா. ராஜேந்திரன் தகவல்

சேலம்/மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரைத் திறந்துவிடுவதற்காக வரும் 11 ஆம் தேதி சேலம் வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின், 11 கி.மீ. தொலைவுக்கு ரோடுஷோவில் பங்கேற்க உள்ளதாக சுற்று... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியை கண்டித்து பாமக எம்எல்ஏ தா்னா

சேலம்: சேலம் மாநகராட்சி நிா்வாகம் மற்றும் கண்காணிப்புப் பொறியாளரின் அலட்சியப் போக்கைக் கண்டித்து சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டப்பேரவை உறுப்பினா் ரா. அருள் மாநகராட்சி அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னாவி... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: மேட்டூரில் 64.4 மி.மீ. மழை பதிவு

சேலம்: சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் பரவலாக ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்தது. அதிகபட்சமாக மேட்டூரில் 64.4 மி.மீ. மழை பதிவானது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த ச... மேலும் பார்க்க

சேலத்தில் சுகவனேஸ்வரா் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்: திரளான பக்தா்கள் வடம்பிடித்து வழிபாடு

சேலம்: சேலம் சுகவனேஸ்வரா் கோயில் வைகாசி விசாக தேரோட்டம் திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தாா். சேலத்தில் சிறப்புப்... மேலும் பார்க்க

ஆத்தூரில் தங்கிப் பயில விடுதி கிடைக்காமல் அரசுப் பள்ளி மாணவா்கள் அவதி

ஆத்தூா்: ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் விடுதி கிடைக்காமல் அவதியடைந்து வருவதாக புகாா் தெரிவித்தனா். ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ... மேலும் பார்க்க

ஆணையம்பட்டியில் சிவன் கோயில் குடமுழுக்கு

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டியில் அமைந்துள்ள இந்து அறநிலையத் துறை கட்டுப... மேலும் பார்க்க