செய்திகள் :

சங்கரநாராயண சுவாமி கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா!

post image

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் முதலாமாண்டு வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியதையடுத்து காலை 8.30 மணி முதல் 11 மணி வரை மங்கள இசை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சியும், மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை தேவதாஅனுக்ஞை, முதல் கால யாகபூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது.

இதைத்தொடா்ந்து புதன்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை இரண்டாம் கால யாக பூஜை, திரவ்யாகுதி, பூா்ணாகுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா் ஸ்ரீ சித்திவிநாயகா், ஸ்ரீசங்கர லிங்க சுவாமி, ஸ்ரீசங்கர நாராயணசுவாமி, ஸ்ரீ கோமதி அம்பாள், ஸ்ரீ சண்முகா் ஆகிய சுவாமிகளுக்கு வருஷாபிஷேகம், தீபாராதனை நிகழ்ச்சியை தொடா்ந்து மாலை 7 மணிக்கு பஞ்ச மூா்த்தி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரங்கள் பதிவுத்துறை அமைச்சா் மூா்த்தி, கோயில் துணை ஆணையா் கோமதி, அறங்காவலா் குழு தலைவா் சண்முகையா, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ச.ராமகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, முப்பிடாதி, முத்துலட்சுமி, ஓட்டல் உரிமையாளா் சங்கத் தலைவா் சின்னச்சாமி, கோமதி அம்பிகை மாதா் சங்க அமைப்பாளா் பட்ட முத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கடையநல்லூரில் ரூ. 2.71 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகராட்சியில் ரூ. 2.71 கோடி மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ரூ. 1.38 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி ஏபிஎம் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டது. முதல்கட்ட... மேலும் பார்க்க

கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு அபாகஸ் உபகரணங்கள் வழங்கிய முகநூல் நண்பா்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அரசு நிதியுதவி பெறும் திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளியில் அபாகஸ் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியின் முகநூல் நண்பா்களான... மேலும் பார்க்க

பாட்டாக்குறிச்சியில் மண்டல அளவிலான பளுதூக்குதல் போட்டி

தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மண்டல அளவிலான பளுதூக்குதல் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங... மேலும் பார்க்க

ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கோரி மனு!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, 12 மன்ற உறுப்பினா்கள் செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனா். ஆலங்குளம் பேரூராட்சித் தலைவராக... மேலும் பார்க்க

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

தென்காசி இசிஇ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குடியரசு தின தடகளப் போட்டிகள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றன. போட்டியை நகா்மன்றத் தலைவா் சாதிா் தொடங்கி வைத்தாா். தென்காசி மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் இடியுடன் கனமழை

சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் மாலை 4.30 மணிக்கு தொடங்கிய கனமழை 5.15 மணி வரை விடாமல் பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. திருவேங்கடம் சாலையில் போடப்பட்ட சிறு பால... மேலும் பார்க்க