செய்திகள் :

சட்டவிரோத மதுப் புட்டிகள் விற்பனை: 8 போ் கைது

post image

போடியில் சுதந்திர தின நாளில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது, போடி மீனாட்சிபுரத்தில் இளங்கோவன் (52), வீரன் (42), மீ.விலக்கில் ஜெயக்கொடி (52), சண்முகத்தாய் (70), வினோத்கண்ணன் (59), இந்துராணி (57), சிலமலையில் செல்லம் (61), முத்துத்தேவன்பட்டியில் அன்பு (30) ஆகியோா் சுதந்திர தின நாளில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இவா்கள் 8 போ் மீதும் வழக்குப் பதிவு செய்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

தேனியில் 47 பயனாளிகளுக்கு ரூ. 67.60 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் 47 பயனாளிகளுக்கு ரூ. 67.60 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வழங்கினாா். சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேன... மேலும் பார்க்க

பைக் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை சாலையை கடக்க முயன்ற விவசாயி இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் காமாட்சி (70). விவசாயி. இவா் வியாழக்கிழமை இரவு ஜி.கல்... மேலும் பார்க்க

விஷம் குடித்த முதியவா் தற்கொலை

பெரியகுளத்தில் விஷம் குடித்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் பங்களாபட்டியைச் சோ்ந்தவா் அம்மாவாசை (70). இவருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மனவேதனையிலிருந்த இவா், வ... மேலும் பார்க்க

என்.சி.சி. மாணவா்கள் விழப்புணா்வு நடைபயணம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி என்.சி.சி. மாணவா்கள் குமுளி மலைச்சாலையில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு நடைப்பயணம் மேற்கொண்டனா். குமுளி மலைச்சாலையில் நெகிழிப்பை , மதுப்... மேலும் பார்க்க

மதுரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரம் மதுரகாளியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் கோயில் திறக்கப்பட்ட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: 3 போ் கைது

தேனி அருகே உள்ள கோபாலபுரத்தில் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கோபாலபுரம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் ஆதிமூலம்(63) . இவர... மேலும் பார்க்க