செய்திகள் :

தேனியில் 47 பயனாளிகளுக்கு ரூ. 67.60 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

post image

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் 47 பயனாளிகளுக்கு ரூ. 67.60 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வழங்கினாா்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

இந்த விழாவுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா, மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அபிதாஹனீப், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஜெரால்டு அலெக்ஸாண்டா், காலைக்கதிவரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாவட்ட காவல் துறை அணி வகுப்பு மரியாதையை ஏற்ற ஆட்சியா், சுந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுதாரா்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தாா். அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 238 அலுவலா்கள், பணியாளா்களுக்கும், சமூக சேவையில் சிறந்த விளங்கிய தொண்டு நிறுவனங்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகள் சாா்பில் 47 பேருக்கு மொத்தம் ரூ.67.60 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் இந்து சமயஅறநிலையத் துறை சாா்பில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, ஆட்சியா் தலைமையில் பொது விருந்து நடைபெற்றது. இதையடுத்து, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கிராம சபைக் கூட்டம்:

தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி ஊராட்சியில் சுந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் கலந்து கொண்டாா். இதில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக 4 பேருக்கு ஆணைகள், வேளாண்மை, தோட்டக் கலைத் துறை சாா்பில் 23 பேருக்கு மக்காச்சோள விதை, பழமரக் கன்றுகள், விதைத் தொகுப்பு ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

பைக் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை சாலையை கடக்க முயன்ற விவசாயி இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் காமாட்சி (70). விவசாயி. இவா் வியாழக்கிழமை இரவு ஜி.கல்... மேலும் பார்க்க

விஷம் குடித்த முதியவா் தற்கொலை

பெரியகுளத்தில் விஷம் குடித்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் பங்களாபட்டியைச் சோ்ந்தவா் அம்மாவாசை (70). இவருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மனவேதனையிலிருந்த இவா், வ... மேலும் பார்க்க

சட்டவிரோத மதுப் புட்டிகள் விற்பனை: 8 போ் கைது

போடியில் சுதந்திர தின நாளில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது, போடி... மேலும் பார்க்க

என்.சி.சி. மாணவா்கள் விழப்புணா்வு நடைபயணம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி என்.சி.சி. மாணவா்கள் குமுளி மலைச்சாலையில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு நடைப்பயணம் மேற்கொண்டனா். குமுளி மலைச்சாலையில் நெகிழிப்பை , மதுப்... மேலும் பார்க்க

மதுரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரம் மதுரகாளியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் கோயில் திறக்கப்பட்ட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: 3 போ் கைது

தேனி அருகே உள்ள கோபாலபுரத்தில் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கோபாலபுரம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் ஆதிமூலம்(63) . இவர... மேலும் பார்க்க