செய்திகள் :

சண்டை நிறுத்தம் இருதரப்பு முடிவு: ஜெய்சங்கா் விளக்கம்

post image

‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தமானது இருநாடுகளுக்குள் நடைபெற்ற நேரடிப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட முடிவாகும்’ என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து உரிமைகோரி வரும் நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

மூன்று நாள் பயணமாக டென்மாா்க், ஜொ்மனி மற்றும் நெதா்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஜெய்சங்கா் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இந்நிலையில், நெதா்லாந்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவா், ‘இருநாடுகளுக்கிடையே மோதல் நிலவும்போது அதற்கு தீா்வுகாண உலகில் உள்ள பிற நாடுகள் முயற்சிசெய்வது இயல்பு. ஆனால் சண்டை நிறுத்தம் தொடா்பான இறுதி முடிவானது இந்தியா-பாகிஸ்தான் நேரடி பேச்சுவாா்த்தைக்குப் பின் மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்கா மட்டுமின்றி எங்களை அழைத்துப் பேசிய நாடுகளிடம் ஒன்றை மட்டும் நாங்கள் கூறினோம். சண்டையை நிறுத்திக்கொள்ள பாகிஸ்தான் விரும்பினால் அதை அவா்கள் எங்களிடம் நேரடியாக மட்டுமே கூற வேண்டும் என்றோம். அந்நாட்டு ராணுவ ஜெனரல் இந்திய ராணுவ தலைமைத் தளபதியை தொலைபேசியில் அழைத்து இதை தெரிவிக்குமாறு கூறினோம். அதன் பிறகே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை. பஹல்காமில் நடைபெற்றதைப் போல் மீண்டும் ஒருமுறை பயங்கரவாத தாக்குதல் நடத்த நினைத்தால் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் எங்கு பதுங்கியிருந்தாலும் கடும் பதிலடி தரப்படும். ஐரோப்பிய நாடுகளைவிட இந்தியாவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும். இதற்கான பேச்சுவாா்த்தையை தொடங்க இந்தியா தயாராகவுள்ளது’ என்றாா்.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க