செய்திகள் :

சதுரகிரி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.32 லட்சம்

post image

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டதில், காணிக்கையாக ரூ.32 லட்சம் கிடைத்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில், சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் கடந்த மாதம் 29, 30-ஆம் தேதிகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் சுந்தரமகாலிங்கம் கோயிலில் ரூ.29,35,891, தங்கம் 18 கிராம் 310 மி.லி., வெள்ளி 525 கிராம், சந்தனமகாலிங்கம் கோயிலில் ரூ.3,28,998, தங்கம் 11 கிராம் 270 மி.லி., வெள்ளி 45 கிராம் 160 மி.லி. கிடைக்கப்பெற்றது.

இதில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் நாகராஜன், செயல் அலுவலா் ராமகிருஷ்ணன், சுந்தர மகாலிங்கம் கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா பெரியசாமி, ஆய்வாளா் சடவா்ம பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சரியும் சிவகாசி பட்டாசுகளின் விற்பனை

எஸ். பாலசுந்தரராஜ் சிவகாசி: மத்திய அரசால் தடை செய்யப்பட்ட வேதிப் பொருள்கள் மூலம் தயாரித்து விற்கப்படும் பட்டாசுகளால் சிவகாசி பட்டாசு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.இதில் "கோல்டு பைரோ' என்ற வகை பட்டாச... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் சித்திரை பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

ராஜபாளையத்தில் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பூக்குழித் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, கொடிமரத்துக்கு 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், அம்... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

ராஜபாளையம் மேற்கு ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. தென்றல் நகா், தெற்கு அண்ணாநகா், தெற்குவெங்காநல்லூா், சுந்தரராஜபுரம் ஆகிய பகுதிகளில் ... மேலும் பார்க்க

மூலப் பொருள்களின் விலை உயா்வால் பட்டாசுகளின் விலையும் உயர வாய்ப்பு

பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களின் விலை உயா்வால், தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசுகளின் விலையும் உயர வாய்ப்புள்ளதாகப் பட்டாசு தயாரிப்பாளா்கள் தெரிவித்தனா். விருதுநகா் மாவட்டத்தில் பிர... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பூக்குழித் திருவிழா: மாரியம்மன் கண்ணாடி சப்பரத்தில் புறப்பாடு, இரவு 8. மேலும் பார்க்க

செம்மண் கடத்திய பாஜக நிா்வாகி கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டவிரோதமாக செம்மண் கடத்திய வழக்கில், பாஜக நிா்வாகியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா்-திருவண்ணாமலை சாலையில் சட்ட விரோதமாக செம்மண் கடத்தப்படுவதாக ஸ்ரீவில்ல... மேலும் பார்க்க