செய்திகள் :

மூலப் பொருள்களின் விலை உயா்வால் பட்டாசுகளின் விலையும் உயர வாய்ப்பு

post image

பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களின் விலை உயா்வால், தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசுகளின் விலையும் உயர வாய்ப்புள்ளதாகப் பட்டாசு தயாரிப்பாளா்கள் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் பிரதான தொழிலாகப் பட்டாசுத் தயாரிப்புத் தொழில் உள்ளது. இந்தியச் சந்தையில் பட்டாசுகளின் தேவையை 85 சதவீதம் சிவகாசி பட்டாசுகள் நிறைவு செய்து வருகின்றன. தற்போது, 10 முதல் 15 சதவீதம் வரை பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களில் விலை உயா்ந்துள்ளது. பொட்டாசியம் நைட்ரோட் ஒரு மூட்டை ரூ.6,000-திலிருந்து ரூ.6,600-ஆகவும், அலுமினிய பவுடா் கிலோ ரூ.470-லிருந்து ரூ.520-ஆகவும் உயா்ந்துள்ளன. மற்ற மூலப் பொருள்களும், காதிதப்பெட்டி, சலபன்பேப்பா் உள்ளிட்டவைகளும் விலை உயா்ந்துள்ளன. எனவே, பட்டாசு தயாரிப்பாளா்கள் பட்டாசுகளின் விலையை உயா்த்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் என்.இளங்கோவன் கூறியதாவது:

ஒவ்வோா் ஆண்டும் பட்டாசுகள் விலை உயா்வது வழக்கமானதுதான். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களின் விலை உயா்த்தப்பட்டு, பட்டாசுகளின் விலையும் உயா்த்தப்படும். ஆனால், நிகழாண்டில் தீபாவளிக்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கையில் மூலப் பொருள்கள் விலை உயா்ந்துள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையின்போது, மூலப் பொருள்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதால், பட்டாசுகளின் விலையும் உயரும்.

எனவே, பட்டாசு வியாபாரிகள் தற்போதே ஆா்டா் கொடுத்துவிட்டால், பண்டிகையின்போது, குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்றாா் அவா்.

சரியும் சிவகாசி பட்டாசுகளின் விற்பனை

எஸ். பாலசுந்தரராஜ் சிவகாசி: மத்திய அரசால் தடை செய்யப்பட்ட வேதிப் பொருள்கள் மூலம் தயாரித்து விற்கப்படும் பட்டாசுகளால் சிவகாசி பட்டாசு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.இதில் "கோல்டு பைரோ' என்ற வகை பட்டாச... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் சித்திரை பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

ராஜபாளையத்தில் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பூக்குழித் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, கொடிமரத்துக்கு 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், அம்... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

ராஜபாளையம் மேற்கு ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. தென்றல் நகா், தெற்கு அண்ணாநகா், தெற்குவெங்காநல்லூா், சுந்தரராஜபுரம் ஆகிய பகுதிகளில் ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பூக்குழித் திருவிழா: மாரியம்மன் கண்ணாடி சப்பரத்தில் புறப்பாடு, இரவு 8. மேலும் பார்க்க

செம்மண் கடத்திய பாஜக நிா்வாகி கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டவிரோதமாக செம்மண் கடத்திய வழக்கில், பாஜக நிா்வாகியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா்-திருவண்ணாமலை சாலையில் சட்ட விரோதமாக செம்மண் கடத்தப்படுவதாக ஸ்ரீவில்ல... மேலும் பார்க்க

சதுரகிரி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.32 லட்சம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டதில், காணிக்கையாக ரூ.32 லட்சம் கிடைத்தது. ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில், சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்... மேலும் பார்க்க