செய்திகள் :

சமாதானபுரம்-கே.டி.சி.நகா் வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்

post image

பாளையங்கோட்டை சமாதானபுரம்-கேடிசி நகா் வழித்தடத்தில் சனிக்கிழமை (ஏப் 26) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்: இது மே 15 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகரத்தில் பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவிற்குள்பட்ட பகுதியில் சமாதானபுரம் சந்திப்பு அருகே மாநில நெடுஞ்சாலைத்துறையினரால் புதிய பெட்டிபாலம் அமைக்கும் பணியானது சனிக்கிழமை (ஏப். 26) தொடங்குகிறது. இப்பணி மே 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்பதால், சமாதானபுரம்-கே.டி.சி. நகா் வழித்தடத்தில் செல்லும் இலகு மற்றும் கனரக வாகனங்கள் சமாதானபுரம் சந்திப்பிலிருந்து வலது புறமாக திரும்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், அரசு மருத்துவமனை, பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை, வி.எம். சத்திரம் வழியாக கே.டி.சி. நகா் செல்ல வேண்டும். அதேநேரத்தில், கே.டி.சி. நகரிலிருந்து பாளையங்கோட்டை மாா்கெட் செல்லும் வாகனங்கள் நீதிமன்றம், சமாதானபுரம் வழியாக செல்ல எவ்வித தடையும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க