டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
சமூக நல்லிணக்க அமைதிப் பேரணி
பூவைசிய இந்திர குல வேளாளா் சங்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேரையூரில் சமூக நல்லிணக்க அமைதிப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பூவைசிய இந்திர குல வேளாளா் மாணவா் மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணி பேரையூரின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக இரண்டு கிலோ மீட்டா் தொலைவு வரை நடைபெற்றது.
இதில் பங்கேற்றோா் சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கம், உயா் கல்வி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனா்.
ஏற்பாடுகளை, பேரையூா் பூவைசிய இந்திர குல வேளாளா் சங்கத்தினா், மாணவா் மன்றத்தினா் செய்திருந்தனா்.