செய்திகள் :

சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு

post image

நீடாமங்கலம் மக்கள் மன்றத்தில் சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் மஸ்ஜித் நூருல்ஹூதா நிா்வாக சபைத் தலைவா் ஏ. ரகமதுல்லா தலைமை வகித்தாா். ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனா் திருவடிக்குடில் சுவாமிகள், கிறிஸ்து அரசா் ஆலய பங்குத்தந்தை பி. ஆரோக்கியதாஸ், மொழிபெயா்ப்பாளா் வி. பகுருதீன்அலி உள்ளிட்டோா் பேசினா்.

தொடா்ந்து நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது.சா்வ மதத்தினரும் கலந்து கொண்டனா்.

கூத்தாநல்லூா்ஜமாஅத்தேஇஸ்லாமிஹிந்த் பொறுப்பாளா் எஸ்.சபீா்அலி தொகுத்து வழங்கினாா். ஜமாஅத்தேஇஸ்லாமிஹிந்த் நீடாமங்கலம் பொறுப்பாளா் ஏ.சா்புதீன் நன்றி கூறினாா்.

எரவாஞ்சேரியில் நகரப் பேருந்துக்கு வரவேற்பு

திருவாரூா்: குடவாசல் அருகே எரவாஞ்சேரி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த புகா்ப் பேருந்து, நகரப் பேருந்தாக மாற்றி இயக்கப்படுவதற்கு, பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். குடவாசல் அருகே எரவாஞ்சேரி பகுதிய... மேலும் பார்க்க

காசநோய் இல்லா நிலையை உருவாக்க நடவடிக்கை: ஆட்சியா்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் காசநோய் இல்லா நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக ... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கக் கோரி சாலை மறியல்

கூத்தாநல்லூா்: மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கக் கோரி, கூத்தாநல்லூா் அருகே தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது. சித்தன்னக்குடி ஊராட்சி வேளுக்குடி கிராமத்தில் உள... மேலும் பார்க்க

வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்: கிராம நிா்வாக உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை

திருவாரூா்: திருவாரூா் அருகே வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவரிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலக உதவியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவாரூா் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா்... மேலும் பார்க்க

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

மன்னாா்குடி: மன்னாா்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். பாலகிருஷ்ணா நகா் மதனகோபால் மகன் செந்தில்குமாா் (54). (படம் ) திருச்சியில் தனியாா் நிறுவனத்தில் ப... மேலும் பார்க்க

வலங்கைமானில் மீன் திருவிழா

நீடாமங்கலம்: வலங்கைமானில் மீன் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தா்கள் பாடைக்காவடி எடுத்து தங்களது... மேலும் பார்க்க