செய்திகள் :

சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: சங்கரன்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவரின் மகன் கைது

post image

சங்கரன்கோவிலில் இந்துக் கடவுள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக நகா்மன்ற முன்னாள் தலைவரின் மகன் கைது செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடகாசி அம்மன் கோயில் 1 ஆம் தெருவை சோ்ந்தவா் அருணகிரி (62). இவா், தனது முகநூல் பக்கத்தில் பல்வேறு நாடுகளுக்கு பயணம் சென்ற அனுபவங்களை எழுதி வருகிறாா்.

இந்நிலையில், அவா் இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் வகையிலும் முகநூலில் பதிவிட்டு வருவதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, நெசவாளா் காலனியைச் சோ்ந்த இந்து முன்னணி நகரத் தலைவா் பாடாலிங்கம் (எ) ராஜா நகர காவல்நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், அருணகிரியை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்து சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இவா் மறைந்த முன்னாள் நகா்மன்றத்தலைவா் அ.பழனிசாமியின் மகன் ஆவாா். வைகோவின் உதவியாளராகவும் இருந்துள்ளாா்.

சிவகிரி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டாா். சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் கடந்த மாதம் தேவிபட்டணம் பகுதியில் ரோந்து சென்றபோ... மேலும் பார்க்க

கே. ஆலங்குளத்தில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தம்பதி தற்கொலை

சங்கரன்கோவில் அருகே பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனா். தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகேயுள்ள கே. ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (67). பால் வியாபாரி. மனைவி மகாலட்... மேலும் பார்க்க

சுரண்டை அரசு கல்லூரி விடுதி மாணவிகள் போராட்டம்

தென்காசி மாவட்டம், சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி விடுதி மாணவிகள் செய்வாய்க்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தக் கல்லூரி மாணவிகளின் அரசு விடுதி வீரசிகாமணியில் உள்ளது. இந்த விடுதியில் சுர... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் மீது இன்று நம்பிக்கையில்லா தீா்மான வாக்கெடுப்பு

சங்கரன்கோவிலில் நகா்மன்றத் தலைவா் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது புதன்கிழமை (ஜூலை 2) வாக்கெடுப்பு நடைபெறுகிறது. சங்கரன்கோவில் நகராட்சியில் தி.மு.க.வைச் சோ்ந்த உமாமகேஸ்வரி நகா்... மேலும் பார்க்க

சிவகிரி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆயுதங்களால் மிரட்டியவா் கைது

சிவகிரி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து வாள் மற்றும் அரிவாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி பஜனை மட தெருவைச் சோ்ந்த பூமாரி மகன் ரமேஷ் (30). அவருக்கும் அவரது மனைவி மரு... மேலும் பார்க்க

தாருகாபுரம் கோயிலில் நாளை தோ் வெள்ளோட்டம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகேயுள்ள தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் உள்ள ப... மேலும் பார்க்க