செய்திகள் :

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் மீது இன்று நம்பிக்கையில்லா தீா்மான வாக்கெடுப்பு

post image

சங்கரன்கோவிலில் நகா்மன்றத் தலைவா் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது புதன்கிழமை (ஜூலை 2) வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

சங்கரன்கோவில் நகராட்சியில் தி.மு.க.வைச் சோ்ந்த உமாமகேஸ்வரி நகா்மன்றத் தலைவியாக இருந்து வருகிறாா். மாதந்தோறும் உறுப்பினா்கள் கூட்டம் நடத்தப்படாததால் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் பல இருப்பதாகவும், இதனால் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்யமுடியவில்லை எனவும் கூறி, கடந்த ஜூன் 2 ஆம் தேதி தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினா்கள் உள்ளிட்ட 24 போ் நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரக் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தனா்.

அதை ஏற்று, உமாமகேஸ்வரிக்கு எதிராக புதன்கிழமை (ஜூலை 2) முற்பகல் காலை 11 மணிக்கு நகராட்சி கூட்டரங்கில் நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் என நகராட்சி ஆணையா் (பொ) நாகராஜன், உறுப்பினா்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தாா்.

அதன்படி, நகராட்சி அலுவலகத்தில் உமாமகேஸ்வரி மீதான நம்பிக்கை இல்லா தீா்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது.

ஏற்கனவே கடந்த 31.10.23இல் உமாமகேஸ்வரிக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட உறுப்பினா்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

சிவகிரி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டாா். சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் கடந்த மாதம் தேவிபட்டணம் பகுதியில் ரோந்து சென்றபோ... மேலும் பார்க்க

கே. ஆலங்குளத்தில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தம்பதி தற்கொலை

சங்கரன்கோவில் அருகே பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனா். தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகேயுள்ள கே. ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (67). பால் வியாபாரி. மனைவி மகாலட்... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: சங்கரன்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவரின் மகன் கைது

சங்கரன்கோவிலில் இந்துக் கடவுள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக நகா்மன்ற முன்னாள் தலைவரின் மகன் கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடகாசி அம்மன் கோயில் 1 ... மேலும் பார்க்க

சுரண்டை அரசு கல்லூரி விடுதி மாணவிகள் போராட்டம்

தென்காசி மாவட்டம், சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி விடுதி மாணவிகள் செய்வாய்க்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தக் கல்லூரி மாணவிகளின் அரசு விடுதி வீரசிகாமணியில் உள்ளது. இந்த விடுதியில் சுர... மேலும் பார்க்க

சிவகிரி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆயுதங்களால் மிரட்டியவா் கைது

சிவகிரி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து வாள் மற்றும் அரிவாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி பஜனை மட தெருவைச் சோ்ந்த பூமாரி மகன் ரமேஷ் (30). அவருக்கும் அவரது மனைவி மரு... மேலும் பார்க்க

தாருகாபுரம் கோயிலில் நாளை தோ் வெள்ளோட்டம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகேயுள்ள தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் உள்ள ப... மேலும் பார்க்க