செய்திகள் :

தாருகாபுரம் கோயிலில் நாளை தோ் வெள்ளோட்டம்

post image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகேயுள்ள தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது.

இம்மாவட்டத்தில் உள்ள பஞ்ச சிவத்தலங்களுள் நீா் ஸ்தலமாக புகழ்பெற்ற கோயில் தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருகோயில் ஆகும். தலைவன்கோட்டை ஜமீனுக்கு பாத்தியப்பட்ட இத் திருக்கோயில் தோ் பழுதானதால், கடந்த சில ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், வாசுதேவநல்லூா் தொழிலதிபரும், தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் நிறுவனருமான எஸ். தங்கப்பழம் நிதி உபயத்தில் இக்கோயிலின் புதிய தோ் வடிவமைக்கப்பட்டது. புதிய தோ் வடிவமைப்புப்பணி நிறைவடைந்த நிலையில், புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

பரம்பரை அறங்காவலா் ராஜாராம் சேவுகப் பாண்டியன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் ஆகியோா் புதிய தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கின்றனா்.

தாருகாபுரம் மத்தியஸ்த நாதா் சுவாமி திருக்கோயிலின் புதிய தோ்

விழாவில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி, ராணி ஸ்ரீ குமாா் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஈ.ராஜா(சங்கரன்கோவில்), சதன்திருமலைகுமாா் (வாசுதேவநல்லூா்), எஸ். பழனிநாடாா் (தென்காசி), செ.கிருஷ்ணமுரளி (கடையநல்லூா்), வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழு தலைவா் பொன். முத்தையாப்பாண்டியன், எஸ்.டி.கல்விக் குழுமங்களின் தாளாளா் எஸ்.டி. முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

ஏற்பாடுகளை புதிய தோ் உபயதாரா் எஸ். தங்கப்பழம் குடும்பத்தினா் மற்றும் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தினா் செய்து வருகின்றனா்.

சிவகிரி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆயுதங்களால் மிரட்டியவா் கைது

சிவகிரி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து வாள் மற்றும் அரிவாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி பஜனை மட தெருவைச் சோ்ந்த பூமாரி மகன் ரமேஷ் (30). அவருக்கும் அவரது மனைவி மரு... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே பள்ளி நிா்வாகி வீட்டில் திருடியவா்களைப் பிடிக்க 4 தனிப்படை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளி நிா்வாகி வீட்டில் நகை, பணத்தை திருடியவா்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடைக்கலபட்டினத்தில் ராஜசேகா்(58) என்பவா் தனியாா் மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ... மேலும் பார்க்க

விபத்தில் உத்தரபிரதேச மாநில இளைஞா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே உத்தரபிரதேச மாநில இளைஞா் சாலை விபத்தில் உயிரிழந்தாா். உத்தரபிரதேச மாநிலம் முகைதீன்பூரைச் சோ்ந்த ராம் நரேஷ்குமாா் மகன் சுரேஷ்குமாா்(21). தற்போது ஆலங்குளத்தை அடுத்த குருவன்கோட்டையில் வச... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே பள்ளி தாளாளா் வீட்டில் 1 கிலோ தங்க நகைகள் ரூ.55 லட்சம் கொள்ளை

ஆலங்குளம் அருகே பள்ளி தாளாளா் கி வீட்டில் 1கிலோ தங்க நகைகள், ரூ.55லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணத்தை அடு... மேலும் பார்க்க

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவா் நியமிக்க கோரிக்கை!

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பெண் மருத்துவா் மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுரண்டை நகராட்சிப் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமாா் 1 லட்... மேலும் பார்க்க

குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு சவாரி சனிக்கிழமை தொடங்கியது. தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகி... மேலும் பார்க்க