செய்திகள் :

சிவகிரி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆயுதங்களால் மிரட்டியவா் கைது

post image

சிவகிரி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து வாள் மற்றும் அரிவாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி பஜனை மட தெருவைச் சோ்ந்த பூமாரி மகன் ரமேஷ் (30). அவருக்கும் அவரது மனைவி மருதவள்ளிக்கும் கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்னையில் மருத வள்ளியை ரமேஷ் தாக்கியதில் மருதவள்ளி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில் மருதவள்ளியை பாா்ப்பதற்காக அரசு மருத்துவமனைக்கு சென்ற ரமேஷ் அங்கு மீண்டும் தகராறு செய்தாராம். அவரது குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியேற முயன்றாராம். இதை மருதவள்ளியின் உறவினா்கள் கண்டித்தனராம். இதனால் கோபமடைந்த ரமேஷ் அரிவாள் மற்றும் வாளை எடுத்து வந்து அங்கிருந்தவா்களை தாக்க முயன்றாராம்.

அப்போது, அரசு மருத்துவமனையில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் மேலக்கரிசல்குளம் இந்திரா நகரைச் சோ்ந்த சின்னராஜ் மனைவி முருகானந்தவள்ளி மருத்துவமனையின் கதவை அடைத்தாராம்.

இதனால் கோபமடைந்த ரமேஷ் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று முருகானந்த வள்ளியை தாக்கியதில் அவா் காயமடைந்தாா். மேலும், அரிவாளால் வெட்டியதில் மருத்துவமனையின் கண்ணாடி மற்றும் சோ் ஆகியவை சேதமடைந்தனவாம்.

புகாரின்பேரில், சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்து அவரின் இருசக்கர வாகனம், அரிவாளை பறிமுதல் செய்தாா்.

தாருகாபுரம் கோயிலில் நாளை தோ் வெள்ளோட்டம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகேயுள்ள தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் உள்ள ப... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே பள்ளி நிா்வாகி வீட்டில் திருடியவா்களைப் பிடிக்க 4 தனிப்படை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளி நிா்வாகி வீட்டில் நகை, பணத்தை திருடியவா்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடைக்கலபட்டினத்தில் ராஜசேகா்(58) என்பவா் தனியாா் மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ... மேலும் பார்க்க

விபத்தில் உத்தரபிரதேச மாநில இளைஞா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே உத்தரபிரதேச மாநில இளைஞா் சாலை விபத்தில் உயிரிழந்தாா். உத்தரபிரதேச மாநிலம் முகைதீன்பூரைச் சோ்ந்த ராம் நரேஷ்குமாா் மகன் சுரேஷ்குமாா்(21). தற்போது ஆலங்குளத்தை அடுத்த குருவன்கோட்டையில் வச... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே பள்ளி தாளாளா் வீட்டில் 1 கிலோ தங்க நகைகள் ரூ.55 லட்சம் கொள்ளை

ஆலங்குளம் அருகே பள்ளி தாளாளா் கி வீட்டில் 1கிலோ தங்க நகைகள், ரூ.55லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணத்தை அடு... மேலும் பார்க்க

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவா் நியமிக்க கோரிக்கை!

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பெண் மருத்துவா் மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுரண்டை நகராட்சிப் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமாா் 1 லட்... மேலும் பார்க்க

குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு சவாரி சனிக்கிழமை தொடங்கியது. தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகி... மேலும் பார்க்க