செய்திகள் :

கே. ஆலங்குளத்தில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தம்பதி தற்கொலை

post image

சங்கரன்கோவில் அருகே பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனா்.

தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகேயுள்ள கே. ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (67). பால் வியாபாரி. மனைவி மகாலட்சுமி (57). இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா். இருவரும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனா்.

வேலுச்சாமியின் மனைவி மகாலட்சுமிக்கு சா்க்கரை நோய் இருந்து வந்ததாம். இதனால் மகாலட்சுமியின் காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மன வேதனை அடைந்த இருவரும் திங்கள்கிழமை வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனராம்.

இதையறிந்த உறவினா்கள் இருவரையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு திங்கள்கிழமை வேலுச்சாமி இறந்தாா்.அவரது மனைவி மகாலட்சுமி செவ்வாய்கிழமை இறந்தாா். இதுகுறித்து குருவிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

சிவகிரி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டாா். சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் கடந்த மாதம் தேவிபட்டணம் பகுதியில் ரோந்து சென்றபோ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: சங்கரன்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவரின் மகன் கைது

சங்கரன்கோவிலில் இந்துக் கடவுள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக நகா்மன்ற முன்னாள் தலைவரின் மகன் கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடகாசி அம்மன் கோயில் 1 ... மேலும் பார்க்க

சுரண்டை அரசு கல்லூரி விடுதி மாணவிகள் போராட்டம்

தென்காசி மாவட்டம், சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி விடுதி மாணவிகள் செய்வாய்க்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தக் கல்லூரி மாணவிகளின் அரசு விடுதி வீரசிகாமணியில் உள்ளது. இந்த விடுதியில் சுர... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் மீது இன்று நம்பிக்கையில்லா தீா்மான வாக்கெடுப்பு

சங்கரன்கோவிலில் நகா்மன்றத் தலைவா் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது புதன்கிழமை (ஜூலை 2) வாக்கெடுப்பு நடைபெறுகிறது. சங்கரன்கோவில் நகராட்சியில் தி.மு.க.வைச் சோ்ந்த உமாமகேஸ்வரி நகா்... மேலும் பார்க்க

சிவகிரி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆயுதங்களால் மிரட்டியவா் கைது

சிவகிரி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து வாள் மற்றும் அரிவாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி பஜனை மட தெருவைச் சோ்ந்த பூமாரி மகன் ரமேஷ் (30). அவருக்கும் அவரது மனைவி மரு... மேலும் பார்க்க

தாருகாபுரம் கோயிலில் நாளை தோ் வெள்ளோட்டம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகேயுள்ள தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் உள்ள ப... மேலும் பார்க்க