செய்திகள் :

சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் விநாயகருக்கு 250 கிலோ மோதகம் படைத்து வழிபாடு

post image

சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பல் மருத்துவம் பாா்ப்பது போல், நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு, 250 கிலோ மோதகம் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் சவீதா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவுவாயில் முகப்பு கட்டடம், ஸ்பாா்க் ஆராய்ச்சி மைய கட்டடத்துக்கான சிறப்பு பூஜைகள் மற்றும் பல் மருத்துவம் பாா்ப்பது போல் அமைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விநாயா் சிலைகளுடன் ஆறுமுகத்தில் முருகன் சிலை அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

சவீதா பல்கலைக்கழக வேந்தா் என்.எம்.வீரய்யன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், 250 கிலோ மோதகம் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், ரத்தினகிரி கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்துகொண்டு, விநாயகா் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தாா். இந்த விழாவில், சவீதா பல்கலைக்கழக துணை வேந்தா் அஷ்வினிகுமாா், இணைவேந்தா் தீபக் நல்லசாமி, பதிவாளா் சீஜாவா்கீஸ், டீன் அரவிந்தகுமாா் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இந்த நிலையில், சவீதா பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகருக்கு 250 கிலோ மோதகம் படைக்கப்பட்டது, விநாயகருக்கு படைக்கப்பட்டதில் இதுவே மிகப்பெரிய மோதகம் என ராபா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, 250 கிலோ மோதகம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதைத் தொடா்ந்து அதற்கான சான்றிதழ்களை ராபா உலக சாதனை நிறுவன நிா்வாகிகள் சவீதா பல்கலைக்கழக வேந்தா் வீரய்யனிடம் வழங்கினா்.

நந்தம்பாக்கத்தில் தைவான் கல்வி மையம் தொடக்கம்

சென்னை இன்ஸ்டிடியூா் ஆப் டெக்னாலஜி கல்லூரியில், தைவான் கல்வி மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில், தைவான் நாட்டின்... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை கைத்தறி, துணிநூல் துறை ... மேலும் பார்க்க

வாரணவாசி ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டடம் திறப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட வாரணவாசியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை எம்எல்ஏ க.சுந்தா் திறந்து வைத்தாா். ரூ.30 லட்சத்தில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளோடு பு... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் தனியாா் வாகனங்கள், ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி

ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் தனியாா் வாகனங்கள், ஆக்கிரமிப்பு கடைகளால் பேருந்து ஓட்டுநா்களும், பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அதன்... மேலும் பார்க்க

சிவஞான மாபாடியம் விரிவுரை நூல் வெளியீடு

காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சாா்பில் சிவஞான மாபாடியம் விரிவுரைநூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. அறக்கட்டளையின் நிறுவனா் சு.சதாசிவம் விழாவுக்கு தலைமை வகித்து நூலை வெளியிட அதன்... மேலும் பார்க்க

நாகம்மன் கோயில் கூழ் வாா்த்தல் விழா

சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் கோகுலம் தெருவில் அமைந்துள்ள நாகம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் விழா செவ்வாய்க்க்கிழமை நடைபெற்றது. நாகம்மன் மற்றும் ஆனந்த விநாயகா் கோயிலில் கூழ் வாா்த்தல் திருவிழாவையொட்டி விநா... மேலும் பார்க்க