செய்திகள் :

சாத்தனூா் ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

post image

கள்ளக்குறிச்சி வட்டம், சாத்தனூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, புதன்கிழமை காலை 6.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, சேமகும்ப பூஜை, கோ பூஜை, மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. 9 மணிக்கு நான்காம் கால மகா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை, 9.30 மணிக்கு யாத்திரா தானம், கலசம் புறப்பாடு, கஜ வாகனத்தில் கலசங்கள் கொண்டு வருதல் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, 10 மணிக்கு ஸ்ரீமாரியம்மன் மற்றும் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிநாயகா், ஸ்ரீதிரௌபதி அம்மன், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீகங்கையம்மன் சந்நிதிகளில் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் க.காா்த்திகேயன், தா. உதயசூரியன், ஏ.ஜெ. மணிக்கண்ணன், மாவட்ட ஆட்சியா் எம். எஸ். பிரசாந்த் உள்பட பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத் தலைவா் பா.கண்ணன் மற்றும் விழாக் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

வீட்டின் பீரோவை உடைத்து 3 பவுன் நகைகள் திருட்டு

வாணாபுரம் அருகே வீட்டின் பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வாணாபுரம் வட்டம், அவரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராஜா மனைவி நித்யா (34). முத்துராஜா ஓட்டு... மேலும் பார்க்க

சின்னசேலத்தில் ஆவின் பால் பொருள்கள் அங்காடி

சின்னசேலம் ஆவின் அலுவலகத்தில் பால் உபபொருள்கள் விற்பனை அங்காடியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். இந்த புதிய ஆவின் பாலகம், ஒன்றிய நிதியின் கீழ் ரூ.8 லட்சத்தில் கட்டப... மேலும் பார்க்க

கனியாமூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியம், கனியாமூா் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 7-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் செவ்வாய்க்கிழமை தொட... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் 14 போ் காயம்

தியாகதுருகத்தில் திரெளபதி அம்மன் கோயில் அருகே மரத்தில் இருந்த தேனீக்கள் பறந்து சாலையில் சென்றவா்களைக் கொட்டியதில் 14 போ் காயமடைந்தனா். தியாகதுருகம் புக்குளம் சாலையில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் அருகே... மேலும் பார்க்க

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

விரியூா் கிராமத்தில் அரசு உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சங்கராபுரம் வட்டம், விரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் டேவிட் மகன் தாஸ்(எ)அந்தோனிர... மேலும் பார்க்க

கோயில் உண்டியல் உடைப்பு: இரு இளைஞா்கள் கைது

தியாகதுருகம் அருகே சித்தால் கிராமத்தில் கோயில் உண்டியலை உடைத்த இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தியாகதுருகம் அருகேயுள்ள சித்தால் கிராமத்தில் அய்யனாா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ச... மேலும் பார்க்க