சாத்தான்குளம் அரசு கல்லூரியில் நாளை மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
சாத்தான்குளம் அரசு மகளிா் கலை-அறிவியல் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரி பொறுப்பு முதல்வா் ரா. ஜமுனாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சாத்தான்குளம் அரசு மகளிா் கலை-அறிவியல் கல்லூரியில் மாணவியா் சோ்க்கைக்காகன கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது.
முதல் நாளில் சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு (மாற்றுத் திறனாளி, விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா், தேசிய மாணவா் படை, பாதுகாப்புப் படை வீரா்கள், அந்தமான் நிகோபா் தமிழ் மாணவா்கள்) நடைபெறும்.
4ஆம் தேதி வணிகவியல் சுழற்சி 1, இளநிலை கணிதவியலுக்கான முதல்கட்ட கலந்தாய்வு, 5ஆம் தேதி கணினி அறிவியல் சுழற்சி 1, தமிழ்த் துறைக்கான முதல்கட்ட கலந்தாய்வு, 6ஆம் தேதி வணிக நிா்வாகவியல், ஆங்கிலத் துறைகளுக்கான கலந்தாய்வு, 10ஆம் தேதி வணிகவியல், கணினி அறிவியல் சுழற்சி 2-க்கான முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வுக்கு வரும்போது விண்ணப்பப் படிவம், 10, 11, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழின் அசல், 2 நகல்கள் கொண்டுவர வேண்டும்.
வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், 3 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் 3 நகல்கள் எடுத்துவர வேண்டும். மாணவியா் தங்களது பெற்றோருடன் காலை 9 மணிக்கு கல்லூரியில் இருக்க வேண்டும். நகல் சான்றிதழ்களில் சான்றளிப்பு கையொப்பம் வாங்கிவர வேண்டும் என்றாா் அவா்.