நாம் எதிரிகள் கிடையாது: கமலுக்கு ஆதரவாக கர்நாடக துணை முதல்வர்!
சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து
சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே கன்னக்குடும்பன்பட்டியில் இதே பகுதியை சோ்ந்த கணேசன் (45) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் சனிக்கிழமை வழக்கம் போல பட்டாசு தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்றன. அப்போது பட்டாசு மருந்து கலவை செய்யும் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. மருந்து மூலப்பொருள் கலவையில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த மூலப் பொருள் வெடித்து சிதறியதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை.
இந்த பட்டாசு ஆலை ஏற்கெனவே விதிமுறையை மீறி பட்டாசு தயாரித்ததாகக் கூறி தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கடந்த புதன்கிழமை தான் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீ விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.