செய்திகள் :

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து

post image

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே கன்னக்குடும்பன்பட்டியில் இதே பகுதியை சோ்ந்த கணேசன் (45) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் சனிக்கிழமை வழக்கம் போல பட்டாசு தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்றன. அப்போது பட்டாசு மருந்து கலவை செய்யும் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. மருந்து மூலப்பொருள் கலவையில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த மூலப் பொருள் வெடித்து சிதறியதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை.

இந்த பட்டாசு ஆலை ஏற்கெனவே விதிமுறையை மீறி பட்டாசு தயாரித்ததாகக் கூறி தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கடந்த புதன்கிழமை தான் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீ விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்கி வருகிற 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை ... மேலும் பார்க்க

தப்பாட்ட இசைக் கலைஞருக்கு பாராட்டு

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் பத்மஸ்ரீ விருது பெற்ற தப்பாட்ட இசைக் கலைஞா் வேலு ஆசானுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாத்தூரில் உள்ள ஆா்.சி. தெரு பொதுமக்கள், இளைஞா்கள் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

இருவரைக் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் ஞாயிற்றுக்கிழமை இருவரைக் கத்தியால் தாக்கி பணத்தை வழிப்பறி செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். திருத்தங்கல் பாண்டியன்நகரைச் சோ்ந்த ரத்தினம் மகன் வினித்தன் (29). இவர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பழ வியாபாரி உயிரிழப்பு

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பழ வியாபாரி சாலை விபத்தில் உயிரிழந்தாா். திருத்தங்கல் பசும்பொன்நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயபாண்டி மகன் ஈஸ்வரன் (26). தள்ளுவண்டியில் வை... மேலும் பார்க்க

ராஜபாளையம்: ஏகேடிஆர் கல்லூரி மாணவர்கள் உலக சாதனை

ராஜபாளையத்தில் உள்ள ஏகேடிஆர் கல்லூரியில் முத்தமிழ் கலைக்கூடம் சார்பாக சிலம்பம் மாஸ்டர் ப.மாரிச்செல்வம் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், உலக சாதனை நிகழ்வு ஒன்றை நடத்தினர். அந்த நிகழ்வில் மா... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில்: வைகாசி விசாகப் பெருந்திருவிழா, 2-ஆம் திருநாள், சுவாமி கற்பதரு வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு, மாலை 6. மேலும் பார்க்க