செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி: பிரபல வேகப் பந்துவீச்சாளருக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த தென்னாப்பிரிக்கா!

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகிய பிரபல வேகப் பந்துவீச்சாளருக்குப் பதிலாக மாற்று வீரரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் 10 நாள்களில் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடத்தப்படுகின்றன. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது. அனைத்து அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இதையும் படிக்க: 14 ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

இந்த நிலையில், காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகிய தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ஆண்ட்ரிச் நார்ட்ஜேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் தென்னாப்பிரிக்க அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான கார்பின் போஸ்ச், ஆண்ட்ரிச் நார்ட்ஜேவுக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடன் ரிசர்வ் வீரராக க்வெனா மாபாகா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பிப்ரவரி 21 ஆம் தேதி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அறிமுக ஆட்டத்தில் 150 ரன்கள்! சாதனை புரிந்த தென்னாப்பிரிக்க வீரர்!

முத்தரப்பு தொடரில் தென்னாப்பிரிக்க வீரர் அறிமுக ஆட்டத்திலேயே அதிக ரன்களை அடித்து சாதனை புரிந்துள்ளார்.பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக... மேலும் பார்க்க

ரோஹித், கில் அதிரடி: 305 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து தொடரை வென்றது இந்தியா!

கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் அதிரடியால் 305 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து இந்திய கிரிக்கெட் அணி தொடரை வென்றது.இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 2-வது ... மேலும் பார்க்க

யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமனம்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் ப... மேலும் பார்க்க

திமுத் கருணாரத்னேவுக்கு ஐசிசி பாராட்டு!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இலங்கை வீரர் திமுத் கருணாரத்னேவை ஐசிசி வெகுவாக பாராட்டியுள்ளது.இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் ... மேலும் பார்க்க

2-வது ஒருநாள்: பென் டக்கெட், ஜோ ரூட் அரைசதம்; இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று (பிப்ரவரி 9) நட... மேலும் பார்க்க

உலகக் கோப்பையைவிட சாம்பியன்ஸ் டிராபி மிகவும் சவாலானது: டெம்பா பவுமா

உலகக் கோப்பைத் தொடரைக் காட்டிலும் சாம்பியன்ஸ் டிராபி மிகவும் சவாலானது என தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவ... மேலும் பார்க்க