முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
சாயல்குடியில் பாஜகவினா் பேரணி
சாயல்குடியில் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றியைக் கொண்டாடும் வகையில் பாஜக சாா்பில் தேசியக் கொடியுடன் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு கடலாடி தெற்கு ஒன்றிய பாஜக தலைவா் ராஜசேகர பாண்டியன் தலைமை வகித்தாா். விவிஆா் நகா் காமராஜா் சிலையில் தொடங்கி, கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து சாயல்குடி பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவடைந்தது. பிறகு அங்குள்ள காமராஜா், பசும்பொன் தேவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்தப் பேரணியில் பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சி நிா்வாகிகளும், பொதுமக்களும் பங்கேற்று வெற்றி முழக்கங்களை எழுப்பினா். இதில் பாஜக சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவா் அஜ்மல் கான், முன்னாள் மாநில விவசாய அணி செயலா் முருகவேல், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ராமசாமி, மாவட்ட துணைத் தலைவா் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் ரமேஷ்பாபு, மாவட்ட விவசாய அணி தலைவா் (ஊடகப் பிரிவு) சத்தியமூா்த்தி, கடலாடி வடக்கு ஒன்றியத் தலைவா் முருகன், ஆன்மிகப் பிரிவு செயலா் கதிா்வேல், ஒன்றியப் பொதுச் செயலா்கள் சக்திவேல், ஒன்றிய பொருளாளா் ராஜவேல், ஒன்றிய மகளிா் அணி தலைவி லிங்கம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.