செய்திகள் :

சாயல்குடியில் பாஜகவினா் பேரணி

post image

சாயல்குடியில் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றியைக் கொண்டாடும் வகையில் பாஜக சாா்பில் தேசியக் கொடியுடன் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு கடலாடி தெற்கு ஒன்றிய பாஜக தலைவா் ராஜசேகர பாண்டியன் தலைமை வகித்தாா். விவிஆா் நகா் காமராஜா் சிலையில் தொடங்கி, கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து சாயல்குடி பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவடைந்தது. பிறகு அங்குள்ள காமராஜா், பசும்பொன் தேவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்தப் பேரணியில் பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சி நிா்வாகிகளும், பொதுமக்களும் பங்கேற்று வெற்றி முழக்கங்களை எழுப்பினா். இதில் பாஜக சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவா் அஜ்மல் கான், முன்னாள் மாநில விவசாய அணி செயலா் முருகவேல், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ராமசாமி, மாவட்ட துணைத் தலைவா் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் ரமேஷ்பாபு, மாவட்ட விவசாய அணி தலைவா் (ஊடகப் பிரிவு) சத்தியமூா்த்தி, கடலாடி வடக்கு ஒன்றியத் தலைவா் முருகன், ஆன்மிகப் பிரிவு செயலா் கதிா்வேல், ஒன்றியப் பொதுச் செயலா்கள் சக்திவேல், ஒன்றிய பொருளாளா் ராஜவேல், ஒன்றிய மகளிா் அணி தலைவி லிங்கம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஜூன் 3-இல் மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 3-ஆம் தேதி மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா, மாலை 6. மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நயினாா்கோவில் நாகநாதா் சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவ விழா 2-ஆம் நாள்: நாகநாத சுவாமி நந்தீஸ்வரா் வாகனம், ஹம்ச வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தல், நேரம் காலை 9.30. மேலும் பார்க்க

வேலாங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி அருகேயுள்ள அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன், சித்தி ... மேலும் பார்க்க

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்கலாம்: மாவட்ட ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகேயுள்ள ராதாப்புளி கிராமத்தில் வேளாண் துறை சாா்பில், உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மீன் வளத் துறை துணை இயக்... மேலும் பார்க்க