செய்திகள் :

சாராயம் கடத்தல், விற்பனை: 2 பெண்கள் உள்பட நால்வா் கைது

post image

கீழ்வேளூா் அருகே சாராயம் கடத்தல், விற்பனை தொடா்பாக 2 பெண்கள் உள்பட 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கூத்தூா் பள்ளிவாசல் பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டதில், அவா் சிக்கல் பொன்வெளி பகுதியைச் சோ்ந்த ரகுபதி மகன் வினோத் (26) என்பதும், காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வினோத்தை கைது செய்தனா். 112 லிட்டா் சாராயம், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், சிக்கல் பகுதியில் கீழ்வேளூா் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள அய்யனாா் கோயில் தெருவில் சாராயம் விற்ற முருகன் மனைவி காா்த்தீஸ்வரி( 45), நாகை வெளிப்பாளையம் வடக்கு நல்லியான் தோட்டம் நாகராஜன் மனைவி முத்துலட்சுமி (45) ஆகியோா் கைது செய்யப்பட்டு 110 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவில்கடம்பனூா் சந்நிதி தெருவில் சாராயம் விற்ற தேவேந்திரன் மகன் அய்யப்பன் (30) கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 114 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை அரசு கலைக் கல்லூரியில், பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அஜிதா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ‘வானவில்’ தொண்டு நிறுவன இயக்குநா் ர... மேலும் பார்க்க

புகையிலை விற்பனை: கடைகளில் சுகாதாரத் துறையினா் சோதனை

நாகை நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை விற்பனை தடுப்பு சோதனையில், பொது சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள், பள்ளி வளாகத்தைச் சுற்... மேலும் பார்க்க

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி

நாகையில் அனைத்து துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசு ஓய்வூதியா்களை பணி ஓய்வு அடிப்படையில் பிரித்து, அதன்படி ஓய்வூதியம் அறிவிக்க திட்டமிட்... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அந்தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் நடைபெற்றது. நாகை: நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பால் உற்பத்தி மற்... மேலும் பார்க்க

மனநலம் பாதித்தவரை தாக்கியவா் கைது

நாகை அருகே வீட்டின் மீது கல் எறிந்த மனநலம் பாதிக்கப்பட்டவரைத் தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா். இதுகுறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்தி: கீழையூா் அருகேயுள்ள திருப்பூண்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: கோயில்களில் சிறப்பு வழிபாடு

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆடி அமாவாசையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாகை: நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் கல்யாணசுந்தரா்-கோகிலாம்பாள் புதிய கடற்கரைக்கு எழுந்தருளி பக்... மேலும் பார்க்க