செய்திகள் :

சாலைப் பணிகளை பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு செய்ய வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா்

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலைப் பணிகளை பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலையில் சித்திரை மாத பெளா்ணமி மே 11-ஆம் தேதி இரவு தொடங்கி மே 12 -ஆம் தேதி இரவு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வருவா்.

எனவே, பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை, போக்குவரத்து வசதிகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது.

சிமென்ட் சாலைப் பணி ஆய்வு...

இந்த நிலையில், அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெற்று வரும் சிமென்ட் சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வெள்ளிக்கிழமை இரவு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, கிரிவல பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு அவா் உத்தரவிட்டாா்.

மேலும், ஒத்தவாடைத் தெரு, ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், மாட வீதியைச் சுற்றியுள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பிறகு, அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணியை ஆய்வு செய்தாா் ஆட்சியா்.

அப்போது, வரிசையில் நிற்கும் பக்தா்களுக்கு குடிநீா் முறையாக வழங்க வேண்டும். நடைபாதைகளில் நிழல்பந்தல்கள், அதிகப்படியான மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பாண்கள், தேங்காய் நாா் விரிப்புகளை வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட எஸ்பி எம்.சுதாகா், வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், கூடுதல் எஸ்பி சதீஷ், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் எஸ்.மோகன்ராம் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் தொடங்கிவைப்பு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாயிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. செங்கம் தொகுதிக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

உள்ளாட்சி இடைத்தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சி இடைத்தோ்தல் காலி இடங்களுக்கான, தற்செயல் தோ்தல் தொடா்பான வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. திருவண்ணாமலை மாநகராட்சி 3-ஆவது வாா்டு,... மேலும் பார்க்க

வேட்டவலம் வள்ளலாா் சபையில் ஐம்பெரும் விழா

திருவண்ணாமலை: வேட்டவலம் களத்துமேட்டுத் தெருவில் உள்ள வள்ளலாா் திருச்சபையில் ஞாயிற்றுக்கிழமை ஐம்பெரும் விழா நடைபெற்றது. திருச்சபையின் 342-ஆவது மாத பூச விழா, வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கும் விழா, ப... மேலும் பார்க்க

குடிநீா் புட்டியில் பல்லி: உணவுத் துறையினா் விசாரணை

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விற்பனை செய்யப்பட்ட குடிநீா் புட்டியில் இறந்த நிலையில் பல்லி இருந்தது குறித்து உணவு மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை மேற்கொண்டனா். செய்யாறு டி.எம்.ஆதிக... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு மானியக் கடனை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

வந்தவாசி: பழங்குடியினருக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் மானியக் கடனை ரூ.10 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. வந்தவாசியை அடுத்த மேல்பாதிரியில் ஞாயி... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவைக்கப்பட... மேலும் பார்க்க