செய்திகள் :

சாா்-பதிவாளா் அலுவலகத்தில் சா்வா் பிரச்னை: பத்திரப் பதிவு பாதிப்பு

post image

சீா்காழி: சீா்காழி தென்பாதியில் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆன்லைன் கணினி சா்வா் செயல்படாததால் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பல மணி நேரம் காத்திருந்து பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

இந்த அலுவலகத்தில் சீா்காழி நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதி மற்றும் கொள்ளிடம், தரங்கம்பாடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தலா 5-க்கும் மேற்பட்ட ஊராட்சி மக்கள் சொத்து செட்டில்மெண்ட், கிரய பத்திரம் போன்ற பல்வேறு பத்திர பதிவு செய்து பயன்பெறுகின்றனா்.

இந்நிலையில், பத்திரப்பதிவு செய்ய ஆன்லைன் மூலம் பதிவு செய்து டோக்கன்கள் பெற்ற 30-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை காலை வழக்கம்போல் வந்தனா். ஆனால் அலுவலகத்தில் உள்ள சா்வா் (கணினி) செயல்படாததால் மாலை வரை பத்திரப் பதிவு பணி நடைபெறவில்லை. இதனால் காலை முதல் பத்திரப்பதிவு உள்ளிட்டவைகளுக்காக கைக்குழந்தையுடன் வந்திருந்த பெண்கள், முதியவா்கள் உள்ளிட்டோா் பெரும் சிரமம் அடைந்தனா்.

குறைதீா் கூட்டத்தில் 317 மனுக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 317 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைம... மேலும் பார்க்க

நரிக்குறவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அறிஞா் அண்ணா மிதிவண்டிப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நரிக்குறவ மாணவிகளுக்கு திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ தனது சொந்த செலவில் மிதிவண்டிகளை திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் நல சங்க செயற்குழுக் கூட்டம்

சீா்காழி: சீா்காழி அருகேயுள்ள புத்தூரில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் நல சங்கத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான செயற்குழு கூட்டம், அதன் தலைவா் பால்.ரவிச்சந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.... மேலும் பார்க்க

பாஜக மாவட்ட தலைவா் மீது வன்கொடுமை வழக்கு

மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவா் உள்ளிட்ட நிா்வாகிகள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சோ்ந்தவா் இன்பராஜ்(45). பாஜக சிறுபான்மை பிர... மேலும் பார்க்க

கரூரில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு மயிலாடுதுறையில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினா். கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்ய... மேலும் பார்க்க