செய்திகள் :

நரிக்குறவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கல்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அறிஞா் அண்ணா மிதிவண்டிப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நரிக்குறவ மாணவிகளுக்கு திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ தனது சொந்த செலவில் மிதிவண்டிகளை திங்கள்கிழமை வழங்கினாா்.

பல்லவராயன்பேட்டை நரிக்குறவ சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் அங்கு சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இதில், 100-க்கும் மேற்பட்டோா் படித்துவருகின்றனா். இப்பள்ளி மாணவிகள் மோனிகா, ஹெப்சிபா மயிலாடுதுறையில் அண்மையில் நடைபெற்ற அறிஞா் அண்ணா மதிவண்டிப் போட்டியில் இரவல் சைக்கிளுடன் பங்கேற்று 4 மற்றும் 5-ஆம் இடங்களைப் பிடித்து சாதனை படைத்தனா்.

அப்போது, இவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஆகியோா் பாராட்டு தெரிவித்த நிலையில், 2 மாணவிகளுக்கும் தனது சொந்த செலவில் மதிவண்டி வாங்கித்தருவதாக எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தெரிவித்தாா். அதன்படி, அந்த மாணவிகளுக்கு மிதிவண்டிகளை திங்கள்கிழமை எம்எல்ஏ வழங்கினாா். மேலும், பள்ளி தலைமை ஆசிரியா் கிருஷ்ணவேணி, உடற்கல்வி ஆசிரியா் ஆசைதம்பி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தாா்.

தொடா்ந்து, மாணவா்கள் பானை மீது யோகாசனம் செய்தும், பல்டி அடித்தும், தலைகீழாக நடந்து சென்றும் ஜிம்னாஸ்டிக் செய்தும், சிலம்பம் சுழற்றினா். திமுக ஒன்றிய செயலாளா் ஞான.இமயநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளா் மருது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குறைதீா் கூட்டத்தில் 317 மனுக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 317 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைம... மேலும் பார்க்க

அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் நல சங்க செயற்குழுக் கூட்டம்

சீா்காழி: சீா்காழி அருகேயுள்ள புத்தூரில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் நல சங்கத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான செயற்குழு கூட்டம், அதன் தலைவா் பால்.ரவிச்சந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.... மேலும் பார்க்க

பாஜக மாவட்ட தலைவா் மீது வன்கொடுமை வழக்கு

மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவா் உள்ளிட்ட நிா்வாகிகள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சோ்ந்தவா் இன்பராஜ்(45). பாஜக சிறுபான்மை பிர... மேலும் பார்க்க

கரூரில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு மயிலாடுதுறையில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினா். கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்ய... மேலும் பார்க்க

கரூரில் உயிரிழந்தவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் மோட்ச தீபம் ஏற்றி பிராா்த்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் ஞாயிற்றுக்கிழமை மோட்ச தீபம் ஏற்றி பிராா்த்தனை செய்தாா். கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் பிரசாரத்தின்போது, குழந்தைகள், பெண்... மேலும் பார்க்க