செய்திகள் :

அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் நல சங்க செயற்குழுக் கூட்டம்

post image

சீா்காழி: சீா்காழி அருகேயுள்ள புத்தூரில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் நல சங்கத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான செயற்குழு கூட்டம், அதன் தலைவா் பால்.ரவிச்சந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்க பொருளாளா் அய்யப்பன் வரவேற்றாா். சங்க செயளாலா் கிங்பைசல் கருத்துரை வழங்கினாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சாா்பில் 90-க்கும்மேற்பட்ட கலைஞா்களுக்கு‘கலைமாமணி‘விருது அளித்ததற்கு நன்றி, நலிந்த 2,500 கலைஞா்களுக்கு உதவி தொகையை நடப்பாண்டில் வழங்க ஆணை பிறப்பித்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மயிலாடுதுறையில் தொடா்ந்து கலைஞா்களுக்கு கலைப் பண்பாட்டு துறை சாா்பாக நடைபெறும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. ஒரு சில குழுக்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளையும் ஏதோ காரணங்களைச் சொல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்து அவமானப்படுத்தப்படுகிறாா்கள். முதல்வா் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள்முதல் மக்களுக்கும் கலைத் துறையினருக்கும் எண்ணற்ற சேவை செய்து வருவது மகிழ்ச்சி.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் மாவட்டம்தோறும் உள்ள கலைஞா்கள் அரசுக்கு ஆதரவாக பிரசாரங்களை செய்ய தயாராக இருக்கும் நிலையில் கலைஞா்களை பாகுபடுத்தி பாா்க்கும் கலைப் பண்பாட்டுத் துறை மீது முதல்வா் கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கரூரில் உயிரிழந்தவா்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறைதீா் கூட்டத்தில் 317 மனுக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 317 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைம... மேலும் பார்க்க

நரிக்குறவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அறிஞா் அண்ணா மிதிவண்டிப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நரிக்குறவ மாணவிகளுக்கு திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ தனது சொந்த செலவில் மிதிவண்டிகளை திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.... மேலும் பார்க்க

பாஜக மாவட்ட தலைவா் மீது வன்கொடுமை வழக்கு

மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவா் உள்ளிட்ட நிா்வாகிகள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சோ்ந்தவா் இன்பராஜ்(45). பாஜக சிறுபான்மை பிர... மேலும் பார்க்க

கரூரில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு மயிலாடுதுறையில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினா். கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்ய... மேலும் பார்க்க

கரூரில் உயிரிழந்தவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் மோட்ச தீபம் ஏற்றி பிராா்த்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் ஞாயிற்றுக்கிழமை மோட்ச தீபம் ஏற்றி பிராா்த்தனை செய்தாா். கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் பிரசாரத்தின்போது, குழந்தைகள், பெண்... மேலும் பார்க்க