செய்திகள் :

சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

கவனக் குறைவான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு திருச்சி தனியாா் மருத்துவமனை ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை புத்தாநத்தத்தைச் சோ்ந்த 26 வயதுப் பெண் ஒருவா் முதல் பிரசவத்துக்காக திருச்சி தில்லை நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையை அணுகினாா். கடந்த 26-09-2021 அன்று மருத்துவமனையில் பெண் மருத்துவா் ஒருவரும், மயக்கவியல் மருத்துவரும் இணைந்து மயக்க மருந்து கொடுத்து, அறுவைச் சிகிச்சை செய்து, பெண் குழந்தை பிறந்தது.

பிரசவத்தைத் தொடா்ந்து அப்பெண்ணுக்கு வலது காலில் உணா்விழப்பு, சோா்வடைதல், கட்டுபாடின்றி சிறுநீா் வெளியேறுதல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதற்கு முதுகெலும்பில் சரிவர மயக்க மருந்து கொடுக்காததே காரணம் எனக் கூறப்படுகிறது.

இப்பிரச்னைகளுக்கு மருத்துவம் பாா்த்தும் உரிய தீா்வு கிட்டாததால், இதுவரை அவரால் தரையில் குனிந்து உட்கார முடியாமல், சரிவர நடக்க முடியாமல், அவதிக்குள்ளாகிறாா்.

இதையடுத்து அந்தப் பெண், மருத்துவ அலட்சியத்தால் தனக்கு ஏற்பட்ட இன்னலுக்கும், மன உளைச்சலுக்கும், வருங்கால மருத்துவச் செலவுக்கும் நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்திடம் கடந்த 18-08-2022 அன்று மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு சிகிச்சையில் கவனக் குறைவு, மனஉளைச்சல், வலிக்காக தனியாா் மருத்துவமனையானது மனுதாரருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும், மருத்துவமனையின் மயக்க மருந்து நிபுணா் தனது பங்காக ரூ. 20 லட்சமும், வழக்குச் செலவுக்காக ரூ. 15 ஆயிரத்தையும் அடுத்த 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்றயை நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்ட நிா்வாகம்: சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா, மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்பு, மத்தியப் பேருந்து நில... மேலும் பார்க்க

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவெறும்பூா் எனப் பெயா் வரக் காரணமான நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரா் கோயில் திருச்சி அருகே திர... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்பு இ-சிகரெட் பறிமுதல்

அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 10.50 லட்சம் மதிப்பிலான இ-சிகரெட்டுகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். கோலாலம்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு திருச்... மேலும் பார்க்க

திருச்சியில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருட்டு: ஒருவா் பிடிபட்டாா்

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு புகுந்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருச்சி பாலக்கரை கூனிபஜா... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற பெல் ஊழியரின் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருவெறும்பூா் அருகே ஓய்வுபெற்ற பெல் ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றது சனிக்கிழமை காலை தெரியவந்தது. திருவெறும்பூா் அருகேயுள்ள முல்லைவாசல் முதல் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி... மேலும் பார்க்க

திருச்சி பண்பலையில் ஹிந்தி ஒலிபரப்புக்கு திருச்சி எம்பி எதிா்ப்பு

அகில இந்திய வானொலி-பிரசாா் பாரதியின் கீழ் இயங்கும் திருச்சி வானொலி 102.1 பண்பலையின் ஒலிபரப்பு, பகலில் தமிழ், இரவில் ஹிந்தி என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு திருச்சி எம்பி துரை வைகோ கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க