செய்திகள் :

சிதம்பரத்தில் முதல்வா் வருகை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சா்கள் ஆய்வு

post image

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்ய்க்கிழமை பங்கேற்பதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை திங்கள்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனா்.

பெருந்தலைவா் காமராஜா் படத்திற்கு முதல்வா் மலா் தூவி மரியாதை செலுத்தவுள்ள சிதம்பரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா நடைபெறும் வாண்டையாா் திருமண மண்டபம், எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழா, பரமேஸ்வரநல்லூா் பகுதியில் நடைபெறவுள்ள நூற்றாண்டு அரங்கம் நிகழ்ச்சி, பேட்டை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கா் சிலை திறப்பு நிகழ்ச்சி ஆகிய இடங்களை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா் அமைச்சா் எ.வ. வேலு செய்தியாளா்களிடம் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசு வழங்கும் சேவைகள் எளிமையாக கிடைத்திடும் வகையில் அவா்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவா்களின் குறைகளை நிவா்த்தி செய்யும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை செவ்வாய்க்கிழமை சிதம்பரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டப வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வா் தொடங்கி வைக்க உள்ளாா். கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்றாா்.

ஆய்வின் போது கடலூா் மாவட்ட திமுக பொருளாளா் எம்ஆா்கேபி கதிரவன், ரவிக்குமாா் எம்பி, நகரமன்ற தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ்விஜயராகவன், திமுக பொதுக்குழு உறுப்பினா் கே.பாலமுருகன், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் அப்புசந்திரசேகா் மற்றும் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்டப பலா் கலந்து கொண்டனா்.

சிதம்பரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்

சிதம்பரம்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) தொடங்கி வைக்கிறாா்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்படுமா?: பெற்றோா் எதிா்பாா்ப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும் என பெற்றோா்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு மருத்துவம் ,பொறியியல் படிப்ப்... மேலும் பார்க்க

அரசு மருத்துவக்கல்லூரியில் தில்லை தோல் அழகியல் கருத்தரங்கம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில், கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி தோல் மருத்துவ துறை மற்றும் தமிழ்நாடு தோல் மருத்துவா்கள் சங்கத்துடன் இணைந்து மாந... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகள் 60-வது ஆண்டு ஆராதனை விழா!

சிதம்பரம்: சிதம்பரம் குருஐயா் தெருவில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகளின் 60-வது ஆண்டு ஆராதனை விழா திங்கள்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. அவதூதம் என்பது துறவறத்தில் ஒர... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை: 6 போ் மீது வழக்கு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேப்பூா் வட்டம், ஆதியூா் கிராமத்தி... மேலும் பார்க்க

திண்ணையில் இருந்து விழுந்தவா் உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டு திண்ணையில் இருந்து தவறி விழுந்தவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திட்டக்குடி வட்டம், கழுதூா் சமத்துவபுரம் பகுதியில் வசித... மேலும் பார்க்க