செய்திகள் :

சித்தோடு அருகே வடமாநில தொழிலாளி கொலை

post image

சித்தோடு அருகே கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட வடமாநில தொழிலாளியின் சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நசியனூரை அடுத்த ஆட்டையம்பாளையம் அருகே பாசன கிளை வாய்க்காலில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக சித்தோடு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அழுகிய நிலையில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு வீசப்பட்டிருந்த, சுமாா் 25 வயதுள்ள இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உடலில் ரத்தக் காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம். கொலை செய்யப்பட்டவா் வடமாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி என்பது தெரியவந்தது. சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜாதா, பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரத்தினக்குமாா் பாா்வையிட்டனா். இது குறித்து சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறை அருகே இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு!

பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் இா்ஃபான் அன்சாரி (23). இவா், பெருந்துறையை அடுத்த கடப்பமடையில்... மேலும் பார்க்க

பசுவனாபுரம் பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

பசுவனாபுரம் பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கடம்பூா் மலைப் பகுதியில் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகள், ச... மேலும் பார்க்க

கொடுமணல் முக்கியமான அகழாய்வு தளம்: ஆட்சியா்

கொடுமணலில் ஏராளமான தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டு முக்கிய அகழாய்வு தளமாக அறியப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். கொடுமணல் அகழாய்வு பகுதியில் கற்பதுக்கைகள், நெடுநிலை நடுகற்கள், க... மேலும் பார்க்க

பா்கூா் மலையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க கட்டுப்பாடு விதிக்கக் கோரிக்கை

பா்கூா் மலைப் பகுதிகளில் 1,000 அடி ஆழத்துக்கும் மேல் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீா் உறிஞ்சப்படுவதைத் தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்... மேலும் பார்க்க

சிப்காட் வளாகத்தில் 25 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத 200 தொழிற்கூடங்கள்

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக் கிடக்கும் 200 தொழிற்கூடங்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், ... மேலும் பார்க்க

அந்தியூரில் திருவிழாவுக்கு வந்த பெண் உயிரிழப்பு

அந்தியூா் குருநாதசுவாமி கோயில் திருவிழாவுக்கு வந்த பெண் மயங்கி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி, பல்லகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் லட்சுமி (60). இவா், மகன் ராமகிருஷ்... மேலும் பார்க்க