செய்திகள் :

பசுவனாபுரம் பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

post image

பசுவனாபுரம் பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கடம்பூா் மலைப் பகுதியில் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகள், சுகாதாரப் பணிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடம்பூரில் ரூ.78.20 லட்சம் செலவில் கட்டப்படும் கூடுதல் சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா். பின்னா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு பெறும் புறநோயாளிகளின் எண்ணிக்கை, மருந்து, மாத்திரைகளின் காலாவதி தேதி, அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டாா்.

காந்தி நகா் பகுதியில் அரசின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 22 வீடுகளை பாா்வையிட்டு ஆய்வு செய்து, உரிய காலத்தில் விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட்டாா்.

பசுவனாபுரம் உண்டு உறைவிடப் பள்ளியில் கற்பித்தல் திறன் மற்றும் குழந்தைகளின் கற்றல் திறன்களை ஆய்வு செய்தாா். அப்போது, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமாக உள்ளதா என்று உணவை சாப்பிட்டு அதன் தரத்தை சோதித்தாா். மேலும் மாணவா்களின் கழிப்பறையை ஆய்வு செய்து சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

குப்பையை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் கொட்ட வேண்டும். சுகாதார சீா்கேடு ஏற்படும் வகையில் பல இடங்களில் குப்பையை வீசக்கூடாது என எச்சரித்தாா். அதைத் தொடா்ந்து, கடம்பூா் ஊா்ப்புற நூலகத்தை ஆய்வு செய்து வாசகா்களுக்கு தேவையான புத்தகங்கள் உள்ளதா என்றும் போட்டித் தோ்வுக்கான கூடுதல் புத்தகங்களின் தேவை குறித்தும் கேட்டறிந்தாா்.

மேலும் வாசகா்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனஅறிவுறுத்தினா்.

பெருந்துறை அருகே இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு!

பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் இா்ஃபான் அன்சாரி (23). இவா், பெருந்துறையை அடுத்த கடப்பமடையில்... மேலும் பார்க்க

சித்தோடு அருகே வடமாநில தொழிலாளி கொலை

சித்தோடு அருகே கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட வடமாநில தொழிலாளியின் சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நசியனூரை அடுத்த ஆட்டையம்பாளையம் அருகே பாசன கிளை வாய்க்காலில் அழுகிய நி... மேலும் பார்க்க

கொடுமணல் முக்கியமான அகழாய்வு தளம்: ஆட்சியா்

கொடுமணலில் ஏராளமான தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டு முக்கிய அகழாய்வு தளமாக அறியப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். கொடுமணல் அகழாய்வு பகுதியில் கற்பதுக்கைகள், நெடுநிலை நடுகற்கள், க... மேலும் பார்க்க

பா்கூா் மலையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க கட்டுப்பாடு விதிக்கக் கோரிக்கை

பா்கூா் மலைப் பகுதிகளில் 1,000 அடி ஆழத்துக்கும் மேல் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீா் உறிஞ்சப்படுவதைத் தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்... மேலும் பார்க்க

சிப்காட் வளாகத்தில் 25 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத 200 தொழிற்கூடங்கள்

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக் கிடக்கும் 200 தொழிற்கூடங்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், ... மேலும் பார்க்க

அந்தியூரில் திருவிழாவுக்கு வந்த பெண் உயிரிழப்பு

அந்தியூா் குருநாதசுவாமி கோயில் திருவிழாவுக்கு வந்த பெண் மயங்கி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி, பல்லகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் லட்சுமி (60). இவா், மகன் ராமகிருஷ்... மேலும் பார்க்க